விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில்
விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் (Virupatchi Arumuga nainar Temple), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான தீர்த்தத் தொட்டியினை கொண்டுள்ளதாலும், விருப்பாச்சி என்ற ஊரில் பக்தருக்கு அருள்புரிந்த முருகன் எழுந்தருளிய தலம் என்பதாலும்,[1] ஆறு முகங்களை கொண்ட சிலை அமைப்பில் காட்சி தருவதாலும் இத்தலம் தீர்த்தத் தொட்டி விருபாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[2] கோவிலின் வழிபாடுகள் மற்றும் சிறப்புகள்மூலவராக ஆறுமுக நயினார் என அழைக்கப்படும் முருகன் சிலை இங்கு உள்ளது. மயில் மேல் அமர்ந்த நிலையில் ஆறு முகங்களுடன் முருகன் காட்சியளிக்கிறார். அருகில் 7 தலை நாகம் மற்றும் மயில் வாகனத்துடன் நாக சுப்பிரமணியர் சிலை ஒன்றும் உள்ளது. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதளம் என அழைக்கப்படுகிறது.[3] கோயில் முன்பு முருக தீர்த்தம் எனப்படும் வற்றாத தீர்த்த தொட்டி உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோசம் நீங்க வேண்டி இந்த தீர்த்த தொட்டியில் நீராடுகின்றனர். பின்னர் நாகசுப்பிரமணியருக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுகின்றனர். குடும்ப நலம், தொழில் முன்னேற்றம், கல்வி சிறக்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தீர்த்த தொட்டியின் சுவற்றில் விநாயகர், முருகன், சிவலிங்கம், வழிபட்ட நிலையில் சப்த கன்னியர் சிலைகள் உள்ளன. விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4] [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia