வயிற்றில் விரை தேங்கிவிட்ட நிலை, புற்ருநோய்கள் மரபு வழியாக உள்ள குடும்பங்கள் ஆகியன பாதிப்புக் காரணகிளாகும்.[5] இது பொதுவாக கருச்செல் கட்டி என வகைப்படுத்தப்படுகிறது. கருச்செல் கட்டியானது விரைப்புற்றுக்கட்டி மற்றும் விரைப்புற்றுக்கட்டி இல்லாதது ஆகிய இருவகைப்படும். பாலின உறுப்புக் கட்டிகள் மற்றும் நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் போன்றனவும் இதில் அடங்கும்.[5] உடற்கூறு சோதனை, கேளா ஒலி அலகீடு மற்றும் குருதிப் பரிசோதனை போன்றவற்றின் மூலம் இதனைக் கண்டறியலாம்.[2]
விரைச்சிரைப் புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடியது ஆகும்.[5]அறுவைச் சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை அல்லது முதல்நிலை உயிரணு மாற்றம் போன்ற பல முறைகளில் சிகிச்சைகள் உள்ளன.[2] மேலும் இந்தப் புற்றுநோயானது பரவினாலும் வேதிச்சிகிச்சை மூலமாக 80 விழுக்காடு மேலாக இதனைக் குணப்படுத்த இயலும்.[4]
2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி 686,000 மக்கள் இந்த வகைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.[6]1990 இல் 7,000 பேரும் 2015 இல் 9,400 பேரும் இதனால் இறந்தனர்.[8][9]வளர்ந்த நாடுகளில் இதன் இறப்பு வீதம் மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது.[10] பொதுவாக இந்த புற்நோயானது 20 முதல் 34 வயது வரையிலான ஆண்களையே பெரும்பான்மையாகப் பாதிக்கின்றது.[3][11] 15 வயதிற்கு குறைவான ஆண் குழந்தைகளை அரிதாகப் பாதிக்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 95 விழுக்காடு பேர் ஐந்து வருட உயிர் வாழ்தல் விகிதத்தில் உள்ளனர்.[3]
அறிகுறிகள்
விந்தகத்தில் கட்டி அல்லது விதைப்பையில் வலி அல்லது வீக்கம் ஆகியவை இதன் முதன்மையான அறிகுறிகளாகும். மரபுவழியாக புற்றுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்வதாக அமெரிக்கப் புற்றுநோய் சங்கமானது கூறியுள்ளது. மேலும் அமெரிக்க சிறுநீரகவியல் சங்கமானது அனைத்து இளம் வயதினரும் மாதந்தோறும் விந்தகப் பரிசோதனை செய்யப் பரிந்துரை செய்கின்றது.[12][13]