வில்லரசம்பட்டி
வில்லரசம்பட்டி (ஆங்கிலம்: Villarasampatti) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 219 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லரசம்பட்டி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°20′37″N 77°41′09″E / 11.343600°N 77.685700°E (அதாவது, 11°20'37.0"N, 77°41'08.5"E) ஆகும். ஈரோடு, நசியனூர், திண்டல், வீரப்பன்சத்திரம் மற்றும் பெரியசேமூர் ஆகியவை வில்லரசம்பட்டி பகுதியை ஒட்டியுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வெ.ரா. திருமகன் சமீபத்தில் மரணமடைந்ததால், 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, அ.தி.மு.க. கட்சியின் வேட்பாளர் குறித்து ஆலோசிக்க மற்றும் அதற்கான கட்சிப் பணிகள் செயலாற்ற, அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் வில்லரசம்பட்டியிலுள்ள ஓர் இடத்தில் நடைபெற்றது.[2][3] இதில் 111 உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு ஏற்படுத்தப்பட்டது.[4] வில்லரசம்பட்டி பெருமாள் கோயில்,[5] வில்லரசம்பட்டி மாகாளியம்மன் கோயில்,[6] வில்லரசம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில்[7] மற்றும் மாரியம்மன் கோயில்[8] ஆகியவை இங்குள்ள முக்கியமான கோயில்களாகும். வில்லரசம்பட்டி பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[9] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
வெளி இணைப்பு |
Portal di Ensiklopedia Dunia