வில்லியம்வில்லியம் (William) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி கிராமத்தைச் சேர்ந்த இவர் இரண்டு முறை திருவாங்கூர்-கொச்சின் சட்ட மன்றத்திற்காகவும், மூன்று முறை சென்னை மாகாண சட்டசபைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக அருமனை தொகுதியில் இருந்து 1952 தேர்தலில் போட்டியிட்டு திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1954ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் இருந்து தமிழ்நாடு காங்கிரசு வேட்பாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 1957 மற்றும் 1962 தேர்தல்களிலும் விளவங்கோடு தொகுதியில் இருந்து மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia