வில்லியம் III (நெதர்லாந்து)
வில்லியம் III (இடச்சு: Willem Alexander Paul Frederik Lodewijk; ஆங்கிலம்: William Alexander Paul Frederick Louis; 19 பிப்ரவரி 1817 – 23 நவம்பர் 1890) நெதர்லாந்து நாட்டின் அரசராகவும் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் 1849 முதல் 1890 வரை இருந்தார். இவர் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த மூன்றாவது அரசர் ஆவார்.[1][2] மூன்றாம் வில்லியம் ரஷ்யாவின் அண்ணா பாவ்லோவ்ன மற்றும் நெதர்லாந்தின் அரசர் இரண்டாம் வில்லியம் ஆகியோரின் மகனாவார். இரண்டாம் வில்லியம்க்கு பின் 1849 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் அரசரானார். மூன்றாம் வில்லியம் தனது அத்தை மகள் சோபியை 1839 ஆம் ஆண்டு மணந்தார் மேலும் இவர்களுக்கு வில்லியம், மௌரிஸ், அலெக்சாண்டர் என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். 1877 ஆம் ஆண்டு சோபியின் மறைவுக்குப்பின் இவர் எம்மாவை 1879 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு வில்ஹெல்மினா என்ற மகள் பிறந்தார். வில்ஹெல்மினா நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia