வி. நடராஜ ஐயர்வி. நடராஜ ஐயர் (இறப்பு: 12 சனவரி 1908)[1] தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகாசிரியரும் நூலாசிரியரும் ஆவார். லோகோபகாரி என்ற தேச பக்தத் தமிழிதழின் ஆசிரியராக இருந்தவர். இவர் இயற்றிய தத்துவ தரிசனி என்ற நூல் பாடசாலைகளில் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.[2] இவர் 1898 ஆம் ஆண்டில் சுவாமி விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து ’ஞானத் திரட்டு’ என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டவர்.[1] 1898 மே 1 அன்று ’ஞானத் திரட்டு பாகம் 1’ வெளியிடப்பட்டது. ஞானத் திரட்டு முதல் தொகுதியை நேரடியாக சுவாமி விவேகானந்தருக்கே அனுப்பி அவரது பதில் கடிதத்தில் ”மாநில மொழிகளில் தமது கருத்தை மொழிபெயர்த்தவர்களில் முன்னோடி’யாகக் குறிப்பிடப்பட்டவர்.[3][4] வி. நடராச ஐயர் திருச்சிராப்பள்ளியில் குளித்தலைக்கு அருகிலுள்ள மருதூரில் வெங்கிடராம ஐயருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். திருச்சியில் எஸ். பி. ஜீ கலாசாலையில் கல்வி பயின்று, தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[1] நடராஜ ஐயர் தாம் ஒரு பத்திரிகையை நடத்த விரும்பி சென்னைக்குச் சென்று லோகோபகாரி என்ற பெயரில் 1895-ஆம் ஆண்டில் பத்திரிகை ஒன்றை வெளியிட ஆரம்பித்தார். தொடக்கத்தில் மாதம் மூன்று இதழ்களாக வெளிவந்த இப்பத்திரிகை 1897 முதல் வார இதழாக வெளிவந்தது.[1] 1897 அக்டோபர் முதல் ஞானசந்திரிகா என்ற இதழையும் சிறிது காலம் வெளியிட்டு வந்தார்.[1] 1901 ஆகத்து முதல் தி இந்தியன் நியூஸ் என்ற ஆங்கில வாரப் பத்திரிகையையும் ஓராண்டு காலம் வெளியிட்டார்.[1] 1902 முதல் லோகோபகாரி பத்திரிகைக்கு பண்டிதை விசாலாட்சியம்மாள் என்பவர் உதவி ஆசிரியராக இருந்து வந்தார்.[1] பண்டிதை விசாலாட்சியம்மாள் எழுதிய லலிதாங்கி, ஜலஜாக்ஷி என்ற இரு புதினங்களை நடராஜ ஐயர் தனது பெயரில் வெளியிட்டார்.[1] ஆனாலும், பின்னர் ஜோதிஷ்மதி என்ற நாவலில் மேற்குறிப்பிட்ட இரு புதினங்களையும் எழுதியவர் விசாலாட்சியம்மாள் என்றி வெளியானது.[1] 1906 இல் லோகோபகாரி பத்திரிகையின் உரிமையை பண்டிதை விசாலாட்சியம்மாளுக்கு அளித்தார்.[1] மறைவுமனப்பிணி, தேகப்பிணி போன்றவற்றால் நொந்திருந்த நடராஜ ஐயர் 1908 சனவரி 12 இல் மறைந்தார். இவரது மனைவி ஜானகி அம்மாள். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் ஐயர் மறுமணம் புரிந்தார், ஆனாலும் அவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia