வெளிச்சம் (இதழ்)
வெளிச்சம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளிவந்த இருமாத கலை இலக்கிய இதழாகும். 1991 - 2008 வரை வெளிவந்த இதழாகும். இதனுடைய ஆசிரியர், கவிஞர் கருணாகரன். பொறுப்பாசிரியர், கவிஞர் புதுவை இரத்தினதுரை. இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன், பொன் பூலோகசிங்கம், இயல்வாணன், சத்துருக்கன், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்), நா. யோகேந்திரநாதன், இத்தாவில் சிவராசா ஆகியோர் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளனர். வெளியீடு
முகவரிநடுவப் பணியகம், கோண்டாவில், யாழ்ப்பாணம் (1991- 1994) பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி (1995 - 1996) 3 ம் வட்டாரம், முள்ளியவளை (1997 - 1999) புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (2000 - 2002) கிளிநொச்சி (2003 ) தமிழீழம். உள்ளடக்கம்இவ்விதழில் விடுதலை உணர்வூட்டும் சிறுகதைகள், கட்டுரைகள், கழக வெளிப்பாடுகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், கவிதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. |
Portal di Ensiklopedia Dunia