வெ. சாமிநாத சர்மா
வெ. சாமிநாத சர்மா (V. Saminatha Sarma) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகக் கலைஞராக செயல்பட்டு உலக நாடுகள், தலைவர்கள் பற்றியும், உலக இலக்கியங்கள் பற்றியும் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்துள்ளார்.[1] வாழ்க்கைக் குறிப்புதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் 1895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று முத்துச்சாமி ஐயர், பார்வதி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக உயர்நிலைப் பள்ளியோடு சர்மாவின் பள்ளிப்படிப்பு முடிவுக்கு வந்தது. சுருக்கெழுத்தாளர், ஆயுள் காப்பீட்டுக் கழகப் பணியாளர், கூட்டுறவுத்துறை ஊழியர் என பல தொழில்கள் செய்தார். 1914 ஆம் ஆண்டில் மங்களம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தொழில்சர்மா துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர் திரு. வி. கவின் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். அங்கே சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை மாகாண முன்னாள் பிரமதமரான டி. பிரகாசம் அவர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கையான சுவராஜ்யாவிலும் பணியாற்றினார். பின்னர் பர்மாவுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு ரங்கூன் நகரத்தில் ஜோதி என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார்.[2] இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் அங்கிருந்து குடும்பத்துடன் பல இன்னல்களை அனுபவித்து சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார். இங்கு வந்தும் பல நூல்களை எழுதினார். இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தை துவக்கினர். 1978 ஆம் ஆண்டு சனவரி ஏழு அன்று கலாசேத்திராவில் காலமானார். படைப்புகள்வாழ்க்கை வரலாற்று நூல்கள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
சிறுகதை நூல்கள்
நாடக நூல்கள்
கடித நூல்கள்
பயண நூல்
வரலாற்று நூல்கள்
கட்டுரை நூல்கள்
அரசியல் நூல்கள்
மணிமொழிகள்
ஆங்கில நூல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வெ. சாமிநாத சர்மா |
Portal di Ensiklopedia Dunia