வேலாயுதம்பாளையம்
புவியியல்11°4'48" வடக்கு 78°0'1" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் வேலாயுதம்பாளையம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 125 மீட்டர் அதாவது 413 அடி உயரத்தில் அமைந்துள்ளது. [4] காலநிலைமே மாத தொடக்கத்தில் இருந்து சூன் மாதத் தொடக்கம் வரை பொதுவாக 34 ° செல்சியசு வரை அதிக வெப்பநிலை பெறப்படுகிறது. இருப்பினும் இது பொதுவாக சில ஆண்டுகளில் 38 ° செல்சியசு வெப்ப நிலையைக் காட்டிலும் அதிகமாக சிலநாட்கள் இருக்கும். சனவரி மாதத்தில் சராசரி தினசரி வெப்பநிலை சுமார் 23 ° செல்சியசு வெப்ப நிலையாகும். இருப்பினும் வெப்பநிலை அரிதாக 17 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழேயும் போவதுண்டு. சராசரி ஆண்டு மழை அளவு சுமார் 725 மி.மீ. ஆகும். செப்டம்பர் பிற்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதன் பருவகால மழையின் பெரும் பகுதியை இக்கிராமம் பெறுகிறது. புகழிமலை (ஆறுநாட்டன்மலை)கரூரின் வடமேற்கே அமைந்துள்ள புகழூரில் உள்ள கோயில், பகவான் முருகனுக்கு வேலயுதம்பாளையத்திலுள்ள ஒரு சிறிய மலையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற சமணர்கள் குகை மற்றும் பழமையான தமிழ் பிராமி சிற்பம் போன்றவை இங்கு காணப்படுகின்றன [5]. எழுத்தறிவுவேலாயுதம்பாளையத்தின் எழுத்தறிவு சதவீதம் ஆண்கள் 77.58% பெண்கள் 60.35% ஆகும். கிராமத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்விச் சேவையாற்றுகின்றன :[6]. போக்குவரத்துகரூர்- பரமத்தி வேலூர் நெடுஞ் சாலையில் வேலாயுதம்பாளையம் அமைந்துள்ளது. தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து வசதியை அளிக்கின்றன. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள புகழூரில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. railway station பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம். இந்நிலையம் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மற்றும் கோயம்பத்தூர், திருச்சி, ஈரோடு நகர இரயில் நிலையங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இரயில் , விரைவு இரயில் சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. 87 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி விமானநிலையம் Trichy (87 km) அமைந்துள்ளது. பொழுது போக்குவேலாயுதம்பாளையத்தில் பொழுது போக்கிற்கென்று திரையரங்குகள் ஏதும் கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் அங்கு புகழூர் அன்னை, வேலாயுதம்பாளையம் காவேரி போன்ற திரையரங்குகள் இருந்தன. திரைப்படத்திற்காக ஒருவர் 'கருர்' அல்லது 'பரமத்தி வேலூர்' செல்லவேண்டும். நகரவாசிகளில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சி அலை வரிசைகளையும் இங்கிருந்து காணவியலும். விவசாயம்வேலாயுதம்பாளையத்தின் பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளது. கரும்பு, தேங்காய், வெற்றிலை பயிரிடுதல் உழவர்களின் முக்கியமான விவசாயத் தொழிலாகும். உடல் நலம்வேலாயுதம்பாளையத்திற்காக புகழிமலை அடிவாரத்தில் ஓர் அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இதை தவிற இரண்டு பெரிய தனியார் மருத்துவ மனைகள் கரூர் – வேலூர் நெடுஞ்சாலையில் மருத்துவ சேவையாற்றுகின்றன. மருத்துவர்கள் சொந்தமாக நடத்தும் சிறு மருத்துவமனைகள் பல இங்குள்ளன. அறுவை சிகிச்சை போன்ற பெரிய மருத்துவ சிகிச்சைகளுக்கு இக்கிராம மக்கள் பரமத்தி வேலூர், கரூர், ஈரோடு, கோயம்பத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்குச் செல்கின்றனர். பொருளாதாரம்உலக வங்கி நிதியுதவியுடன் தமிழக அரசால் ஊக்குவிக்கப்படும் TNPL காகிதத்தொழிற்சாலை இக்கிராமத்திற்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள புகழூரில் இயங்குகிறது. செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்கள் கரும்புச் சக்கையிலிருந்து இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்நிறுவனமானது சுற்றுச் சூழலை பாதிக்காதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அதிக அளவு காகிதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இது இரண்டாமிடம் பெறுகிறது .இந்நிறுவனம் ஆண்டுக்கு 4,00,000 டன் காகிதத்தை உற்பத்தி செய்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia