வேளாக்குறிச்சி ஆதீனம்
திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சித்தாந்த சைவ ஆதீனம் ஆகும். இவ்வாதீனம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நகரில் ஒரு பகுதியாகிய பொருனை நதிக்கரையில் அமைந்த வேளைநகர் என அழைக்கப்படும் வேளாக்குறிச்சியில் கிபி பதினான்காம் நுற்றாண்டில் சத்திய ஞான தேசிக தீர்க்கதரிசினி என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. வரலாறுவேளாக்குறிச்சி ஆதீன குரு பரம்பரை திருக்கயிலாயத்திலிருந்து தொடங்குகிறது, ஆ௧வே திருக்கயிலாய பரம்பரை என்று வழங்கப்படுகிறது. கயிலையில் ஸ்ரீகண்ட பரமசிவம் ௨பதேசித்தருளிய திருநந்திதேவர் ௨பதேசம் பெற்ற அருளாளர்கள் சணகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் ஆவர். சனற்குமாரரிடம் சத்தியஞான தரிசினிகள் ௨பதேசம் பெற்று பரஞ்சோதி முனிவருக்கு ௨பதேசம் அருளினார்கள். இவர்கள் அகச்சந்தான குரவர்களாவார்கள். பரஞ்சோதிமுனிவரிடம் ௨பதேசம் பெற்றவர் மெய்கண்டார். மெய்கண்டார் முதலாக அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம் ஈறான நால்வரும் புறச்சந்தான குரவர்கள் ஆவார்கள். ௨மாபதிசிவத்திடம் ௨பதேசம் பெற்றவர் அருள் நமச்சிவாயர். அருள் நமச்சிவாயரிடம் காழிகங்கைமெய்கண்டார் ௨பதேசம் பெற்றார். காழிகங்கைமெய்கண்டாரிடம் காழிசிற்றம்பல நாடிகளும், காழி சிற்றம்பல நாடிகளிடம் பழுதைக்கட்டி சம்பந்த முனிவரும், பழுதைக்கட்டி சம்பந்த முனிவரிடம் காவை அம்பலநாத சுவாமிகளும் உபதேசம் பெற்றனர். காவை அம்பலநாத சுவாமிகளிடம் சத்திய ஞானதேசிக தீர்க்கதரிசினிகள் உபதேசம் பெற்றார். ஆதீன முதற்குரவரான ஸ்ரீசத்தியஞான தேசிக தீர்க்க தரிசினிகள் 14ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழவள நாட்டின் கும்பகோணத்திற்கு அருகாமையில் ஞானபூமியாகிய சிவபுரம் திருத்தலத்தில் தோன்றினார்கள். ஸ்ரீசத்தியஞானி இளமையிலேயே காழிபழுதை கட்டி சம்பந்த முனிவரின் சீடரான திருப்பரங்குன்றம்-காவனூர்[காவை} அம்பலநாத சுவாமிகளை ஞானாசிரியராக அடைந்து சகலாகமங்களையும் கற்றுத் தெளிந்தார்கள். வேளை நகரில் ஆதீனத்தை நிறுவிக் கல்லிடைக்குறிச்சியில் திருமடம், பூஐை மடம், நந்தவனங்கள் அமைத்து சைவ சமய பரிபாலனம் செய்துவரலானார்கள். இவர்களின் அருள் திறத்தினைக் கேள்வியுற்ற திருவாங்௯ர் மன்னர் சுசீந்திரம்.கல்லிடைக்குறிச்சி,வெள்ளங்குளி,பாபநாசம் ஆகிய கிராமங்களில் நன்செய்,புன்செய் நிலங்களை நிவந்தங்களாக வழங்கி"தந்தச் சிவிகையும் தந்து சிறப்பித்துள்ளார். சில காலம் கழித்து விஐயநகர பேர்ரசின் வேண்டுகோளினை ஏற்றுத் திருவாருரில் நெடுங்காலம் இருந்து சைவ சமய பரிபாலனமும் சிவாலய பரிபாலனமும் செய்துள்ளார்கள்.திருவாருர் ஸ்ரீதியாகராஐ சுவாமி திருக்கோயிலுக்கு அபிஷேக்க் கட்டளை, அன்னதானக் கட்டளைகள் நிறுவி ஸ்ரீதியாகேசர் பூசை சிறப்புற நடைபெறச் செய்து பல சீடர்களுக்குச் சிறந்த ஞானாசிரியராக விளங்கினார்கள். சைவசித்தாந்த ஆதீனங்கள் -18 இல் இந்த ஆதீன குருமகாசந்நிதானம் இல்லறத்தார் குடியீச சந்நியாசி. துழாவூர் ஆதீனமும் நாச்சியார்கோயில் ஆதீனமும் இல்லறத்தார்களே. ௨மாமகேஸ்வர்ர் ருபமாகச் சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்விப்பது இவ் ஆதீன மரபு. வம்ச பரம்பரை இந்த ஆதீனம். இந்த தனிச்சிறப்பும் திருப்புகலூரில் மடம் ௨ள்ளதும் தஞ்சாவூர் மாவட்ட அரசிதழ் 1915லும் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குருமகாசந்நிதானங்கள் இல்லறத்தார்களுக்கும்,துறவறத்தார்களுக்கும் ஞானோபதேசம் செய்வித்துப் பக்குவமடைந்த சீடர்களைத் தம்பிரான்களாக நியமனம் செய்து தம்பிரான்களைத் தமது பிரதிநிதிகளாகத் திருக்கோயில்கள் மற்றும் திருவாருர் அபிஷேக்க் கட்டளை அன்னதானக் கட்டளைகள் நிர்வாகத்தைக் கவனித்து வரச் செய்துள்ளார்கள். குருமுதல்வர் மீது பிள்ளைத்தமிழ் ௨ள்ள சைவசித்தாந்த ஆதீனம் திருக்கயிலாயபரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம். ஸ்ரீசத்தியஞானிக்குத் தையல்பாகமுனி என்ற இளைய சகோதரர் ஒருவர் இருந்துள்ளார். சீடர்களில் ஒருவர் ஸ்ரீசத்தியஞான பண்டாரம் பிள்ளைத்தமிழ் என்ற அரிய தமிழ் இலக்கிய நூலை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் குருமுதல்வரின் சிறப்பும், குருமுதல்வர் இல்லற ஞானி என்பதும் திருநெல்வேலியிலும் திருவாருரிலும் சமய பரிபாலனம் செய்தவர்கள் என்பதும் வடமொழியிலும் தென்தமிழிலும் சிறந்த பாண்டித்துவமுடையவர்கள் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.பிள்ளைத்தமிழ் இயற்றிய ஆசிரியர் குருபக்தியின் சிறந்து விளங்கியதன் காரணமாகத் தமது பெயரைகூடக் குறிப்பிடவில்லை. தமது குருநாதரை ஆதீன முதல்குரவரை "சங்கத்தமிழ் பயில் வேளைநகர்க்கொருதருவே" பொருனையும் புடையடுத்து ஓங்கிவளர் வேளைநகராளி,வளர்நகர் வழுத்து முகில்,பொதியைத் தமிழுணர்வுறும் சைவப்பெருமான்,கமலைவாழ் ஆகமவரோதயன்,பொன்னிவளநாடன்,தமிழாபரணர், கமலைசத்தியஞானசிதம்பரநாதமாசிலாமணி,என்று பிள்ளைத்தமிழில் போற்றியுள்ளார். கிளை மடங்கள்
ஆதின கோயில்கள்
ஆதீன இலக்கியங்கள்
வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சந்நிதானங்கள்
ஆதீன சீடர்கள்
உசாத்துணைகள்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.அருணாசலம் |
Portal di Ensiklopedia Dunia