வே. இலெ. எத்திராசு
வேலூர் இலெட்சுமணசுவாமி முதலியார் எத்திராசு (Vellore Lakshmanaswamy Mudaliar Ethiraj, 18 ஜூலை 1890- 18 ஆகஸ்ட் 1960) இந்திய வழக்கறிஞர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் இந்தியாவின் சென்னையில் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார். இவர் மெட்ராஸ் பார் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[1] எத்திராசு ஜூலை 18 1890ஆம் ஆண்டு வேலூரின் வளமான பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். இவர் லெட்சுமணசாமி மற்றும் அம்மாயி அம்மாளின் ஒரே குழந்தையாவார். எத்திராசு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்ட பட்டம் பெற்றார்[சான்று தேவை] . எத்திராசின் வழக்கறிஞர் தொழில் வழக்கு வெற்றிகளில் ஒன்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. இவர் தமிழ் நடிகர்கள் எம்.கே. தியாகராஜா பாகவதர் மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை பாதுகாப்பதற்காக வெற்றிகரமாகப் போராடினார்.[2] இவரது வாதத்தை சே. ப. இராமசுவாமி "20ஆம் நூற்றாண்டின் அற்புதம்" என்று விவரித்தார்.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia