வே. கார்த்திகேயன்வே. கார்த்திகேயன் (பிறப்பு:07-11-1924[1] இறப்பு:4-12-2014) என்னும் வேதகிரி கார்த்திகேயன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும், இரண்டு முறை ஆளுநரின் ஆலோசகராகவும் இருந்தவர். தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மக்கள் கொடையுடன் சரபோசி கல்லூரி கட்டடத்தைக் கட்டிமுடித்தற்காக அப்போதைய முதல்வர் காமராசரால் பாராட்டைப் பெற்றவர். வாழ்க்கையும் கல்வியும்பிறந்த ஊர் செங்கல்பட்டு வட்டம், பொன்மார் சிற்றூர். தந்தை பி.வேதகிரி, தாய் திரிபுரசுந்தரி. சொந்த ஊரில் பள்ளிக்கல்வி. சென்னை கிருத்தவக் கல்லூரியில் இண்டர் மீடியட், பி.ஏ. ஹானர்ஸ்(வரலாறு, பொராளாதாரம், அரசியல்) சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது தகுதிநிலையில் (ரேங்) தேர்வு. பணி
பொறுப்பு
குடும்பம்இவரது மனைவியின் பெயர் பரவதம்மாள். இவருக்கு நடராஜன், கிருஷ்ணகுமார், விஜயகுமார், ஆகியமகன்களும், விஜயலட்சுமி, உஷா ஆகியோர் மகள்களாவர். முதல் மகன் நடராஜனின் மனைவி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஆவார். மறைவுகார்திகேயனுக்கு 31.11.2014 அன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4.12.2014 அன்று காலமானார்.[3] உசாத்துணை
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia