வைக்கம் சரஸ்வதி
வைக்கம் சரஸ்வதி (Vaikom Saraswathi) தென்னிந்திய கருநாடக இசைப் பாடகியும், திரைப்படப் பின்னணிப் பாடகியும் ஆவார்.[2] இவர் பாடிய பல கருநாடக இசைப் பாடல்கள் இசைத்தட்டுகளில் வெளிவந்துள்ளன.[2] இந்திய வானொலிகளில் 1940கள், 50களில் இவரது கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[3] வாழ்க்கைக் குறிப்புவைக்கம் சரசுவதியின் தந்தை காலட்சேபதிலகம் என அழைக்கப்பட்ட கவாய் விசுவநாத பாகவதர் ஆவார்.[4] கதாகாலட்சேபம் செய்து கொண்டே இசையுலகில் நுழைந்தவர் சரசுவதி. ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் மாணவி.[4] தமிழில் பின்னணிப் பாடல் முறை வரத்தொடங்கிய 1947-ஆம் ஆண்டில், கே. வி. மகாதேவன் வைக்கம் சரஸ்வதியை தன அமராவதி திரைப்படத்திலே பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.[2] நடிகை பி. எஸ். சரோஜாவிற்காக கண்டேனடி, உன் திருவருள், அழகை ஆகிய பாடல்களை இத்திரைப்படத்தில் இவர் பாடினார்.[5] 1948 இல் வெளிவந்த ஜம்பம் திரைப்படத்தில் வாரும் இந்த வேளை, சேதி என்ன ஆகிய பாடல்களையும் இவர் பாடினார்.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia