வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 20 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் அதிகமான நூல்களுக்கு உரை இயற்றியவர் ஆவார். கல்லூரிகளிலும் உயர் நிலைப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல உரைகளை எழுதிவெளியிட்டார். இவரது உரையில் மிகுதியான வட சொற்கள் உள்ளன. இவர் விளக்கங்களை அதிகமாக எழுதும் வழக்கம் உடையவர் ஆவார். படைப்புகம்பராமாயணம் (முழுவதும்), வில்லிபாரதம் (முழுவதும்), பத்துப் பாட்டு (தனித்தனிப் பாடல்களுக்கு உரை), சிலப்பதிகாரம் (அடைக்கலக் காதை, கடலாடுகாதை), திருக்குறள் பரிமேலழகர் விளக்கவுரை (சிறந்த ஆராய்ச்சி முன்னுரையுடன்), நாலடியார், நன்னூல் (காண்டிகையுரை), சடகோபர் அந்தாதி, திருப்பாவை, சரசுவதியந்தாதி, திருவேங்கடக்கலம்பகம், அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், முதுமொழிக்காஞ்சி, அஷ்டப் பிரபந்தம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முதலிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திறன்இவரது உரைத்திறனை அறிய வில்லிபாரத உரையின் ஒரு பகுதியைக் காண்போம். விராட பருவத்தில் நிரை மீட்சிச் சருக்கம் 56 -இல், முந்த ஆன்தொறு மீட்டலும் முற்கவர் பொதுவர் என்ற பாடல் அருச்சுனன் நிரை மீட்டபோது, இடையர்கள் மனம் மகிழ்ந்ததைக் குறிப்பிடுகின்றது. இப்பாடலுக்குக் கோபால கிருஷ்ணமாசாரியார் பொழிப்புரையும், அருஞ்சொற் பொருளையும் பின்வருமாறு கூறி, விளக்கம் எழுதுகின்றார்.
|
Portal di Ensiklopedia Dunia