1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து
இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 (Imperial Airways Handley Page W.10; பதிவு:ஜி-இபிஎம்டி [G-EBMT]) எனப்படும் வானூர்தி, 1929 ஆம் வருடம், சூன் 17-ம் திகதி,[1] ஆங்கிலக் கால்வாய் நிலக்கூம்பு பகுதியில் இயந்திர செயலிழப்பு காரணமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வானூர்தி சம்பவத்தின்போது சர்வதேச திட்டமிடல்படி, ஐக்கிய இராச்சியம் கிராய்டன் விமான தளத்திலிருந்து, சுவிச்சர்லாந்து சூரிச் விமான தளம் நோக்கி பரந்ததாக அறியப்படுகிறது. இவ்விபத்தின்போது, 2 சிப்பந்திகளுடன் 11 பயணிகள் பயணித்ததாகவும், அதில் 7 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 6 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பியதாக மூலதகவல் உள்ளது.[2] வானூர்தி விவரம்விபத்துக்குள்ளான "ஒட்டோவா பெருநகர்" (City of Ottawa) என்ற பெயரிடப்பட்ட இந்த வானூர்தி, ஹான்ட்லே பேஜ் டபிள்யூ 10 (Handley Page W.10) வகையைச் சேர்ந்ததாகும். 1925 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் இம்பீரியல் எயார்வேசு நிறுவனம் வெளியிட்டு இயக்கிவந்த இவ் வானூர்தி, ஜி-இபிஎம்டி (G-EBMT) என்று பதியப் பெற்றது.[3] பாதிக்கப்பட்டவர்கள்இறப்புகள் தேசியம் -[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia