1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு
1933 யுனைடெட் ஏயர்லைன்சு போயிங் 247 நடுவானில் வெடிப்பு (1933 United Airlines Boeing 247 mid-air explosion) எனும் இந்த நடு வான் வானூர்தி விபத்து, 1933-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் நாளன்று, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மாநிலமான இந்தியானா செஸ்டர்டன் (Chesterton, Indiana) எனும் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது. விபத்துக்குள்ளான போயிங் 247 (Boeing 247) வகையைச் சார்ந்த இவ்வானூர்தி (பதிவு எண்:NC13304)NC13304 அமெரிக்காவின் முக்கிய வானூர்தி சேவைகளில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கிவந்ததாகும்.[1][2] பயணத் திட்டம்கண்டம் கடந்த பறக்கக்கூடிய இந்த வானூர்தியில், மூன்று சேவைப் பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்தனர். சம்பவத்தின்போது, (அன்று) அமெரிக்காவின் நியூ செர்சி மாகாணத்திலுள்ள நுவார்க் விமானநிலையத்திலிருந்து, புறபட்டு ஒகையோ மாநிலத்தின் பெருநகரான கிளீவ்லண்ட் சென்று, அங்கிருந்து 2-வது நிறுத்தமான இலினொய் மாகாணத்திலுள்ள சிகாகோ மாநகரில் நின்று, மீண்டும் அங்கிருந்து பயண இலக்கான கலிபோர்னியா மாநில ஓக்லண்ட் நகரை அடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia