1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து
1933 டிக்ஸ்முய்டி இம்பீரியல் ஏயர்வேசு விபத்து (1933 Imperial Airways Diksmuide crash) எனும் இந்த அபாயகரமான, மற்றும் நாசவேலைக் காரணமாக சந்தேகிக்கப்படும் இவ்வானூர்தி விபத்து, 1933-ம், ஆண்டு, மார்ச்சு 28, அன்று, நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய "ஆம்ஸ்ட்ராங் வித்வொர்த் அர்கோசி" லிவர்பூல் மாநகரம் (Armstrong Whitworth Argosy (City of Liverpool) வகையை சார்ந்த இவ்வானூர்தி, 'பிரித்தானிய விமான நிறுவனமான' "இம்பீரியல் ஏயர்வேசு" மூலம் இயங்கிவந்ததாகும்.[1] வடக்கு பெல்ஜியத்தின் 'டிக்ஸ்முய்டி' அல்லது 'டிக்ஸ்முடி' (Diksmuide or (Dixmude) எனும் பகுதியின் அருகே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், வானூர்தியில் பயணித்த அனைவருமே (15-பேர்கள்) கொல்லப்பட்டனர். அந்நேரத்தில் இந்நிகழ்வை, பிரித்தானிய வானூர்தி வரலாற்றில் இறப்புகளை ஏற்படுத்திய விபத்தாக பதிவு செய்துள்ளனர். மேலும் இவ்விபத்து, எப்போதாவது நடக்கும் நாசவேலை விபத்துக்களில் இதுவே முதல் வானூர்தி விபத்து என்று கூறப்பட்டு வருகிறது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia