1959 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்
1959 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1959; ஆங்கிலம்: 1959 Southeast Asian Peninsular Games,) என்பது அதிகாரப் பூர்வமாக 1-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் என்று அழைக்கப் படுகின்றன, இது சியாப் விளையாட்டு கூட்டமைப்பால் (SEAP Games Federation) ஏற்பாடு செய்யப்பட்ட தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் தொடக்க விளையாட்டு ஆகும். இது தாய்லாந்தின் பாங்காக்கில் 1959 டிசம்பர் 12-ஆம் தேதி முதல் 17 டிசம்பர் 12-ஆம் தேதி வரை, 12 விளையாட்டுகளுடன் நடைபெற்றது. SEAP விளையாட்டு சம்மேளனத்தின் ஆறு நிறுவன உறுப்பிய னாடுகளில் ஒன்றான கம்போடியா, தொடக்கப் போட்டியில் கலந்யது கொள்ளவில்லை.[1] முதல் முறையாக தாய்லாந்து இந்த விளையாட்டுகளை நடத்தியது, இந்த விளையாட்டு பின்னர் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் என்று மாற்றம் கன்டது. சுபச்சலசாய் அரங்கத்தில் (Suphachalasai Stadium) தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (Bhumibol Adulyadej) விளையாட்டுகளைத் திறந்து வைத்தார். இறுதிப் பதக்கப் பட்டியலில் தாய்லாந்தும், அதன் அண்டை நாடுகளான பர்மா மற்றும் மலாயாவும் முன்னிலை வகித்தன. விளையாட்டுகள்பங்கேற்பு நாடுகள்அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர், ஒரு பிரித்தானிய காலனியாக இருந்தது. விளையாட்டு
பதக்க அட்டவணைபோட்டி நடத்திய நாடு (தாய்லாந்து)
மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia