1971 தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுகள்
1971 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள்; (மலாய்: Sukan Semenanjung Asia Tenggara 1971; ஆங்கிலம்: 1971 Southeast Asian Peninsular Games) என்பது 6-ஆவது தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள் ஆகும். சியாப் விளையாட்டுக் கூட்டமைப்பால் (SEAP Games Federation) உருவாக்கப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி. 1971 தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகள், தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான பல்வகை விளையாட்டு நிகழ்வின் ஆறாவது விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] மலேசியா, கோலாலம்பூர் நகரில் 1971 டிசம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை, 15 விளையாட்டுகளுடன் நடைபெற்றது. 1965-க்குப் பிறகு மலேசியா இரண்டாவது முறையாக, இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. அடுத்த தென்கிழக்கு ஆசியத் தீபகற்ப விளையாட்டுகளில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா இரு நாடுகளையும் உள்ளடக்கி விரிவுபடுத்துமாறு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தாய்லாந்திற்கு அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் பயனில்லை.[2] கோலாலம்பூர், மெர்டேகா அரங்கத்தில் (Stadium Merdeka); மலேசியாவின் மாமன்னர் அப்துல் ஹலீம் (Ismail Nasiruddin), இந்த விளையாட்டு நிகழ்வை அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைத்தார். விளையாட்டுகள்பங்கேற்பு நாடுகள்விளையாட்டுபதக்க அட்டவணைபோட்டி நடத்திய நாடு (மலேசியா)
மேற்கோள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia