1980 பாகல்பூர் குருடாக்கல் நிகழ்வு1980 பாகல்பூர் குருடாக்கல் நிகழ்வு (1980 Bhagalpur blindings) என்பது 1979 ஆம் ஆண்டு மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் நடந்த தொடர்ச்சியான சில சம்பவங்களைக் குறிக்கிறது. அப்போது விசாரணையின் கீழ் இருந்த 31 விசாரணை கைதிகளின் கண்களில் காவல்துறையினர் அமிலத்தை ஊற்றி குருடாக்கினர் இந்த சம்பவம் பாகல்பூர் குருடாக்கல் சம்பவமாக பிரபலமடைந்தது. பல மனித உரிமை அமைப்புகள் பரவலாக விவாதித்து கடுமையாக விமர்சித்தன. பாகல்பூர் குருடாக்கல் வழக்கு, அடிப்படை மனித உரிமைகளை மீறியதற்காக இழப்பீடு வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட முதல் குற்றவியல் நீதித்துறை வரலாற்றை உருவாக்கியது.[1] பண்பாட்டில்இந்தி மொழித் திரைப்படமான கங்காசல் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். [2] அமிதாப் பராசரின் ஆவணப்படமான "தி ஐசு ஆஃப் டார்க்னசு" இந்த சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு குருட்டுத்தன்மையை ஆவணப்படுத்தியது. இத்தகைய சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia