2007 சீனச் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை2007 சீனாவின் செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனை (2007 Chinese anti-satellite missile test) ஜனவரி மாதம் 11 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீனாவால் நடத்தப்பட்டது. சீனாவின் காலநிலை அறியும் செயற்கைக்கோளான (Chinese weather satellite) எஃப் ஒய்-1சி (FY-1C) எனும் பெங்குயின் (Fengyun) வகைச் செயற்கைக்கோள் சீனாவால் ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டது. இச்செயற்கைக் கோளானது பூமியிலிருந்து 537 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்தது. இதன் எடை 750 கிலோகிராம்கள் ஆகும். தகர்ப்பு ஏவுகணைசெயற்கைக் கோளைத் தகர்த்த ஏவுகணை (kinetic kill vehicle) வினாடிக்கு 8 கிலோமீட்டர்கள் எனும் வேகத்தில் சென்று தாக்கியது.இந்த ஏவுகணை சீனாவின் சிசாய் ஏவுதளத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ ஏவப்பட்டது. இந்த ஏவுகணை பல்லடுக்கு திட எரிபொருள் ஏவுகணை ஆகும். அறிவிப்புஏவியேசன் வீக் & இசுபேச் டெக்னாலசி இதழ் (Aviation Week & Space Technology magazine) இச்சோதனையைப் பற்றிய முதல் செய்தியை வெளியிட்டது. பின்னர் சனவரி மாதம் 18 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்பு சபை இச்சோதனையை உறுதி செய்தது.[1] முதலில் சீன அரசு இச்சோதனை தொடர்பாக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. பின்னர் சனவரி மாதம் 23 ஆம் தியதி 2007 ஆம் ஆண்டு சீன வெளியுறவுத் துறை அமைச்சு இச்சோதனை நடத்தப்பட்டதை உறுதி செய்தது.[2] மேலும் இச்சோதனையைப் பற்றி சப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததாகவும் அறிவித்தது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia