2008 சிச்சுவான் நிலநடுக்கம்
2008 சிச்சுவன் பூகம்பம் என்பது சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும். ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் அளவு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம், சீன நேரப்படி 2008 மே 12 ஆம் நாள் மதியம் 14:28:01.42 மணியளவில் நிகழ்ந்தது. 1976-ல் டாங்சான் மாகாணத்தைத் தாக்கிய பூகம்பத்திற்கு பிறகு சீனாவைத் தாக்கிய மிக மோசமான பூகம்பமாக இது கருதப்படுகிறது[6]. நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகள்சிச்சுவான் மாகாணத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் சீனாவின் (1560 கி.மீ தள்ளியிருக்கும்) பீஜிங், ஷாங்காய் (1744 கி.மீ தள்ளியிருக்கும்), ஆகிய பெருநகரங்களிலும் தைவான் (1912 கி.மீ தள்ளியிருக்கும்), தாய்லாந்து (1940 கி.மீ தள்ளியிருக்கும்) ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.[7] நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள்70000 மனிதர்களின் உயிரைக் குடித்த இந்த நிலநடுக்கத்தினால் 4 லட்சம் மக்கள் காயமடைந்துள்ளனர், 50 லட்சம் மக்கள் வீடுகள் இழந்துள்ளனர். தரைமட்டமாகிவிட்ட 31.3 லட்சம் கட்டிடங்களையும் சேர்த்து 156.10 லட்சம் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்று சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.[7]. மேலும் இறந்த 70,000 பேரில் 19065 பள்ளி மாணவர்கள் என்று சீனாவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia