941 (latest official reports from NDRRMC as of 7:00 p.m. October 16, 2013)[5]
உயிரிழப்புகள்
144 பேர் இறப்பு; 23 பேரைக் காணவில்லை; 291 பேர் காயமுற்றனர்(data from NDRRMC; as of 7:00 p.m. October 16)[5]
2013 போகோல் நிலநடுக்கம் (2013 Bohol earthquake) அக்டோபர் 15, 2013 அன்று பிலிப்பைன்ஸ் திட்ட நேரப்படி காலை 8:12:31 மணிக்கு போகோலில் ஏற்பட்டது. மத்திய விசயாசில் அமைந்துள்ள ஒரு தீவு மாகாணம் போகோல் ஆகும்.[6] பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 என இருந்தது.[1][7] நிலநடுக்கமையம் கார்மென் எனும் இடத்தில் 33 கிமீ ஆழத்தில் இருந்தது.[1] இந்த நடுக்கம் தவாவோ நகரத்திலும் உணரப்பட்டதாக அறியப்படுகிறது.[6]
தேசிய பேரிடர் ஆபத்து மற்றும் மேலாண்மைக் கழகத்தின் அண்மைய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின்படி 144 பேர் இறந்துள்ளனர். 23 பேரைக் காணவில்லை. மேலும் 291 பேர் காயமுற்றுள்ளனர்.[5]
பிலிப்பைன்சில் கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மிகக்கொடூரமான நிலநடுக்கம் இதுவாகும். இந்நிலநடுக்கத்தில் இரோசிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டைவிட 32 மடங்கு அதிக ஆற்றல் வெளிப்பட்டது.[8] ஏற்கனவே ஒருமுறை போகோலில் 1990இல் பிப்ரவரி 8 அன்று ஒரு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதில் பல கட்டடங்கள் பாதிப்புற்று ஆழிப்பேரலையும் ஏற்பட்டது.[9][10]