2013 லிட்டில் இந்தியா கலவரம்
2013 லிட்டில் இந்தியா கலவரம் (ஆங்கிலம்: 2013 Little India riots) 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தியதி சிங்கப்பூரில் நடந்தது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 21:23 அன்று இக்கலவரம் நடைபெற்றது. வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரம் தொடங்கியது. ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் ஹேம்ஸ்பியர் சாலை சந்திப்பில் நடைபெற்ற இக்கலவரத்தில் சுமார் 400 வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர்.[2][3] இக்கலவரத்தில் பேருந்து ஒன்றும் அவசர வாகனம் (emergency vehicle) தாக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் இக்கலவரம் நடைபெற்றது. சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற இரண்டாவது கலவரம் ஆகும். முதல் கலவரம் 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது.[2][4] வாகன விபத்துசிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி சக்திவேல் குமாரவேலு மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தார். இவர் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளத்திலுள்ள ஓணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். [5] சக்திவேல் குமாரவேலு மது அருந்தியிருந்தார் என சிங்கப்பூர் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்[6]. கலவரம்இரண்டு மணி நேரம் நடந்த இக்கலவரம் நள்ளிரவுக்குப் பின் முடிவுக்கு வந்தது. [7] கலவரத்தின் போது மதுக் குப்பிகளை கலவரக்காரர்கள் வீசி எறிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரின் சிறப்புப் படைப் பிரிவு இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இக்கலவரத்தின் போது 25 அவசர வாகனங்கள் சேதமுற்றன. மேலும் 5 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.[8] இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகளில் கலவரக்காரர்கள் காவல்துறை வானங்களை தலைகீழாய் புரட்டினர்.[7] கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.[8]இக்கலவரத்தைக் கையாள 300 காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.[9] விசாரணைசிங்கப்பூர் காவல் துறையின் அறிக்கையின் படி சக்திவேல் குமாரவேலு எனும் இந்திய கட்டுமானத் தொழிலாளி வாகன விபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இக்கலவரம் நடைபெற்றது.[10]. வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட 24 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[11] கைதானவர்களின் விபரம்கலவரத்தில் கைதானவர்கள் விபரம் கீழே. [12]
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களின் மீதான குற்றம் தமிழ் மொழியில் வாசிக்கப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் மாதம் 17 தியதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். [13] இந்தியத் தூதரகம் கைதானவர்களுக்கு சட்ட உதவி செய்துவருகிறது. [14] சன் தொலைக்காட்சியின் தவறான தகவல்தமிழகத்தின் சன் தொலைக்காட்சி இக்கலவரம் பற்றிய தவறான தகவல்களை ஒளிபரப்பியது. இது தொடர்பாய் சிங்கப்பூர் காவல் துறையினரிடம் வழக்கு பதிவாகியுள்ளது. [15] மேலும் சன் தொலைக்காட்சி நிறுவனம் சரியான செய்தியை தனது ஒளிபரப்பிலும் இணையத்திலும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. [16] [17] எனவே சன் தொலைக்காட்சி தனது தவறான செய்தி ஒளிபரப்புக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.[18] [19] நாட்டைவிட்டு வெளியேற்றம்கலவரம் தொடர்பாக 4000 நபர்களை சிங்கப்பூர் காவல்துறையினர் விசாரித்தனர்.[20] மேலும் 53 நபர்களை நாட்டைவிட்டு வெளியேற்றினர். இதில் 52 பேர் இந்திய நாட்டவர் ஒருவர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர். இவர்கள் வேலை அனுமதி அட்டையுடன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதுடன், மீண்டும் சிங்கப்பூருக்குள் எதிர்காலத்தில் நுழையமுடியாது எனவும் சிங்கப்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.[21][22] தீர்ப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia