2016 இசுதான்புல் வானூர்தி நிலையத் தாக்குதல்
சூன் 28, 2016 அன்று துருக்கியின் இசுதான்புல் நகரத்திலுள்ள அத்தாதுர்க் வானூர்தி நிலையத்தின் முனையம் இரண்டில் வெடிகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது.[4] தாக்குதல் நடத்தியவர்களைத் தவிர குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாகவும் 230 பேர் காயமுற்றதாகவும் துருக்கியப் பிரதமர் பினாலி யாகதிம் அறிவித்தார்.[2][5][6] வானூர்தி நிலையத்தின் தானுந்து நிறுத்தற் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும்[4] பன்னாட்டு வருகை முனையத்தின் வாயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததாகவும்[7] அறியப்படுகின்றது; இதனை தற்கொலைப் படையினர் நடத்தியதாகவும் கருதப்படுகின்றது.[2] வெடிகுண்டுகள் வானூர்தி நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தனவாக சில அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.[6] முனையத்தில் அல்லது அருகில் மூன்று தற்கொலைத் தாக்குவோர் குண்டுகளை வெடித்துள்ளனர்; நான்கு ஆயுதமேந்தியோர் குண்டு வெடித்தபின் ஓடியதாகவும் நேரடி சாட்சிகள் சிலவற்றை மேற்கோளிட்டு செய்திகள் வந்துள்ளன. இதனை காவல்துறையினர் உறுதி செய்யவில்லை. ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல் 90 விநாடிகளில் முடிந்து விட்டதாக ஓர் மூத்த ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அலுவலர் குறிப்பிட்டார்.[8] பாதிக்கப்பட்டோர்சவூதி அரேபியாவிலிருந்து ஐந்து பேரும், 23 துருக்கிய நாட்டினரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.[9]
மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia