2016 பாக்கித்தான் வெள்ளம்2016 பாக்கித்தான் வெள்ளம் (2016 Pakistan flood) குறைந்தபட்சம் 71 பேரை பலிகொண்டது [1][2]. 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் [3] சனிக்கிழமை இரவு தொடங்கிய அடை மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும் [4][5][6]. வடமேற்கு எல்லைப்புற மாகாணமான [7] கைபர் பக்துன்வா மாகாணம் இவ்வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவகாலத்திற்கு முன் கனமழை பொழிவது தெற்கு ஆசியாவில் ஒரு பொதுவான நிகழ்வாகும் [8]. கைபர் பக்துன்வா அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தொடங்கியது [7]. மோசமான உள்கட்டமைப்புடன் கூடிய கிராமப்புற பகுதிகள் மிகவும் எளிமையாக பாதிக்கக்கூடியவை என்பதால் இந்த வெள்ளப்பெருக்கு நிகழ்வில் சுமார் 150 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன [3][9]. மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட கொடூரமான நிலச்சரிவுகளால் கூடுதலாக 23 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் 5 பேர் உயிர் பிழைத்தனர் மற்றும் மீட்கப்பட்டனர் [10]. மேலும் இப்பகுதியில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் நிர்மூலமாயின. பயிர் இழப்பும் அதிக அளவில் ஏற்பட்டது [10][11]. இதே ஆண்டு ஆகத்து மாதத்தில் மற்றொரு கனமழைக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் காரணமாக 82 பேர் கொல்லப்பட்டனர், கோரமான பேருந்து விபத்தில் ஏற்பட்ட 27 பேரின் உயிரிழப்பும் மற்றும் நான்கு பேர் காணாமல் போன நிகழ்வும் இதில் அடங்கும் [12]. இடமும் இறப்பும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia