2018 அமிருதசரசு தொடருந்து விபத்து
அமிருதசரசு தொடருந்து விபத்து என்பது இந்திய மாநிலம், பஞ்சாப்பிலுள்ள, அமிருதசரசு நகருக்கு அருகே இருப்புப் பாதையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது தொடருந்து மோதி ஏற்பட்ட விபத்தினைக் குறிக்கும். அக்டோபர் 19, 2018 அன்று நடந்த இந்த விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.[1] விபத்து விவரம்அமிருதசரசு நகருக்கு அருகிலுள்ள ஜோடா படாக் என்னுமிடத்தில் மைதானம் ஒன்றில், தசரா பண்டிகையை 300 பேர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படும் நிகழ்வை பொதுமக்களில் ஒரு பிரிவினர் அருகிலுள்ள இருப்புப் பாதையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு தடங்களிலும் தொடருந்துகள் வந்ததில், ஒரு தொடருந்து பொதுமக்கள் கூட்டத்தின்மீது மோதி 59 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். உருவ பொம்மை எரிக்கப்படும்போது பட்டாசுகள் வெடித்ததில், கூட்டத்தின் ஒரு பகுதியினர் இருப்புப் பாதையை நோக்கி ஓடியதாகவும் அப்போது நெரிசல் ஏற்பட்டது என்பதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது. அப்போது அக்கூட்டத்தின்போது தொடருந்து மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia