2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று
இத்தாலியில் முதலாவது உறுதி செய்யப்பட்ட கொரோனாவைரசுத் தொற்று 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள் உரோம் நகரில் பரிசோதிக்கப்பட்டதில் தெரிய வந்தது.[2] ஒரு வாரத்தின் பின் ஊகான் நகரில் இருந்து திரும்பியனுப்பப்பட்ட இத்தாலியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தாக்கம் உள்ளவராக உறுதிசெய்யப்பட்டது.[3] பின்னர் ஒரு தொகுதியினர் நோய்த்தாக்கம் உள்ளவர்களாக 16 பேர் 21 பெப்ரவரியில் லோம்பார்டியில் உறுதி செய்யப்பட்டனர்.[4] மேலும் 60 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முதலாவது இறப்பும் 22 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்ச் ஆரம்பத்தில் இத்தாலி முழுவதும் நோய் பரவியது.[5] 2020, மே 01 வரை இத்தாலியில் 205,463 தீவிரமான கொரோனாவைரசுத் தொற்று பதிவாகியுள்ளது – இது ஏனைய நாடுகளில் பரவியுள்ள தொற்றுகளை விட மிக அதிகமானதாக இருந்தது.[6] மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்டவை:205,463, இறப்புகள்: 27,967, உடல்நலம் தேறியவர்கள்: 75,945 ஆகும்.[1] காலவரிசைLua error in Module:Medical_cases_chart at line 643: attempt to index local 'key' (a number value). விளக்கப்படங்கள்
இவற்றையும் பார்க்கஉசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia