2020 மக்காவுவில் கொரோனாவைரசுத் தொற்று
மக்காவுல் கொரோனாவைரசு தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். மக்காவுல் 22 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது. காலவரிசைLua error in Module:Medical_cases_chart at line 456: attempt to perform arithmetic on local 'lastDate' (a nil value). 22 சனவரி 2020 அன்று, மக்காவுல் முதல் இரண்டுபேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 52 வயதான பெண் மற்றும் 66 வயதான நபர் இவர்கள் இரண்டு பேரும் ஊகான் சென்று வந்தவர்கள். 22 சனவரி 2020 அன்று மக்காவு அரசு அனைத்து பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடவதாக அரசு அறிவித்துள்ளது.[1][2] 27 சனவரி 2020 அன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது.[3] அடுத்த நாள், ஏழாவது கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது, இவர் 67 வயதான ஒரு பெண் ஆவார்.[4] பாதிப்புகள்4 பிப்ரவரி 2020 அன்று, மக்காவில் உள்ள அனைத்து கேளிக்கை விடுதிகளையும் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.[5][6] 20 பிப்ரவரி 2020 அன்று அனைத்து கேளிக்கை விடுதிகளும் திறந்தார்கள், ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது.[7][8] 20 பிப்ரவரி 2020 முதல் மக்காவு அரசாங்கம், சீனாவின் வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மக்காவு வருவதை தடைசெய்தது.[9] 18 மார்ச் 2020 முதல் அனைத்து நாட்டு பயணிகளும் மக்காவுக்குள் வருவதை தடைசெய்தது. இதில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்தது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia