உருசியாவின் 8-ஆவது அரசுத்தலைவர் தேர்தல் 2024 மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை நடைபெற்றது.[3][4].[5] வெற்றி பெறும் வேட்பாளர் 2024 மே 7 அன்று புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்பார்.[6] 6 சுயேச்சை வேட்பாளர்களும், 9 அரசியல் கட்சி வேட்பாளர்களுமாக மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.[7] இத்தேர்தலில் விளாதிமிர் பூட்டின் அவர்கள் 6வது முறையாக வெற்றி பெற்றார்.
நடப்பு அரசுத்தலைவரும் சுயேச்சை வேட்பாளருமான விளாதிமிர் பூட்டின் 2020 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் போட்டியிடத் தகுதி பெற்றார்.[8][9][10]
2018 அரசுத்தலைவர் தேர்தலில் இருந்ததைப் போலவே, உருசிய எதிர்க்கட்சியின் மிக முக்கியமான உறுப்பினரான அலெக்சேய் நவால்னி குற்றவியல் தண்டனையின் காரணமாக போட்டியிடுவது தடுக்கப்பட்டது.[11][12][13] தேர்தலின் போது அவர் சிறையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், 2024 பெப்ரவரி 16 அன்று அவர் சிறையிலேயே இறந்தார்.[14][15][16] நவால்னிக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகப் பரவலாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக, பல பார்வையாளர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இத்தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மாறாக, 2022-இல் உக்ரைனுடன்முழு அளவிலான போரைத் தொடங்கியதில் இருந்து அரசியல் அடக்குமுறைகளை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பூட்டின், தேர்தல் செயல்முறையில் ஆதிக்கம் செலுத்துவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.[17][18][19][20][21]
தகுதி
தேர்தல் சின்னம்
2020 அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர், உருசியாவின் அரசியலமைப்பின் 81-வது பிரிவின் 3-வது பிரிவின் படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை அரசுத்தலைவர் பதவியை வகிக்க முடியாது, இது விளாதிமிர் பூட்டினை 2012-இல் அரசுத்தலைவராக அனுமதித்தது.[22] அரசியலமைப்புச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்தமாக இரண்டு பதவிக் காலங்களுக்கு ஒரு கடினமான வரம்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன் வழங்கப்பட்ட விதிமுறைகள் கணக்கிடப்படாது. இது பூட்டினுக்கு மேலும் இரண்டு அரசுத்தலைவர் பதவிகளுக்குத் தகுதி அளிக்கிறது.
அரசியலமைப்பின் புதிய சட்ட விதிகளின் கீழ், அரசுத்தலைவர் வேட்பாளர் ஒருவர்:[23]
குறைந்தது அகவை 35 ஆக இருக்க வேண்டும் (இவ்விதியில் மாற்றமில்லை);
குறைந்தது 25 ஆண்டுகள் (முன்பு 10 ஆண்டுகள்) உருசியாவில் வசித்திருக்க வேண்டும்;
தேர்தல் நேரத்திலோ அல்லது அதற்கு முன் எந்த நேரத்திலோ வெளிநாட்டுக் குடியுரிமை அல்லது வெளிநாட்டில் குடியிருப்பு அனுமதி இருக்கக்கூடாது.
அரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்கள்
இந்த பிரிவில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இருக்கும்.[24]
பெயர், அகவை, கட்சி
அனுபவம்
இடம்
பரப்புரை
விபரங்கள்
பதிவு நாள்
விளாதிசுலாவ் தவான்கொவ் (39) புதிய மக்கள்
நாடாளுமன்ற துணைத் தலைவர் (2021-இன்று) நாடாளுமன்ற உறுப்பினர் (2021–இன்று)
2023 திசம்பரில் கட்சியின் காங்கிரசின் போது தவான்கோவ் அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். அவரை வளர்ச்சிக் கட்சியும் ஆதரித்தது, அது புதிய மக்கள் கட்சியுடன் இணைவதாக அறிவித்தது. தவான்கோவ் 2023 திசம்பர் 25 இலும் 2024 சனவரி 1 இலும் தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.[25][26]
திசம்பர் 2023 இல் வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவின் போது, பூட்டின் தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்தார். ஐக்கிய உருசியா கட்சி, உண்மைக்கான உருசியா கட்சிகள் இவரை ஆதரித்தன. 2023 திசம்பர் 18 அன்று தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை பூட்டின் சமர்ப்பித்தார், அவை திசம்பர் 20 அன்று பதிவு செய்யப்பட்டன.[27][28]
29 சனவரி 2024
லியொனீது சிலூத்சுக்கி (56) லிபரல் சனநாயகக் கட்சி
லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் (2022–இன்று) நாடாளுமன்ற உறுப்பினர் (1999–இன்று)
சிலூத்சுக்கி திசம்பர் 2023 இல் கட்சியின் காங்கிரசின் போது அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். 25 திசம்பர் 2023, 1 சனவரி 2024 ஆகிய நாட்களில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.[29][30]
2023 திசம்பரில் கட்சியின் காங்கிரசின் போது கரித்தோனொவ் அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு 2004 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 13.7% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2023 திசம்பர் 27, 2024 சனவரி 3 ஆகிய தேதிகளில் தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
9 சனவரி 2024
கருத்துக் கணிப்புகள்
பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பில் சுயேச்சையாக நின்ற விளாதிமிர் பூட்டின் அவர்களே மீண்டும் வெற்றி பெறுவார் என்று அனைத்து கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.
தேர்தல் முடிவுகள்
உருசிய மாநில வாரியாக இரண்டாம் இடம் பிடித்தவர்கள்: நிக்கொலாய் கரித்தொனவ் விளாதிசுலாவ் தவான்கொவ் லியொனீது சிலூத்சுக்கி