2024 சென்னை விமான சாகசக் காட்சி2024 சென்னை விமான சாகசக் காட்சி (2024 Chennai Air Show) இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வோர் ஆண்டும் இந்திய விமானப்படை நாள் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. விமான சாகசக் காட்சியைக் காண்பதற்கு 15 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.[1] உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த இராணுவ நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.[2] இந்திய விமானப் படையின் அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்ட 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. விபத்துசென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்திருந்த விமானக் கண்காட்சியின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.[3][4][5] இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia