2025 கலிபோர்னியா காட்டுத்தீ
2025 கலிபோர்னியா காட்டுத்தீ (2025 California wildfire season), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி சுற்றியுள்ள மலைக்காடுகளில் தொடர்ந்து கட்டுக்கடங்காமல், 35,999 ஏக்கர் பரப்பளவில் 98 இடங்களில் பரவிக் கொண்டிருக்கும் தீயைக் குறிக்கிறது. காட்டுதீயால் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 10 ஆயிரம் வணிக கட்டடங்களும், 30 ஆயிரம் குடியிருப்புகளும் தீயில் கருகின. காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. காட்டுத்தீயை அணைக்க 6 தீயணைப்பு படைக்குழுவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.[4][5]அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இத்துயர நிகழ்வை பேரிடராக அறிவித்துள்ளார்.[6]இத்தீயால் ரூபாய் 13 இலட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.[7] சுருக்கம்தெற்கு கலிபோர்னியாவில் 7 சனவரி 2025 அன்று எரியத் துவங்கிய காட்டுத்தீ, தற்போது ஈட்டன், அல்டாடெனா, பாலிசேட்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியை சுற்றி வளைத்து எரிகிறது.[8]பாலிசேட்ஸ் பகுதியில் 22,600 ஏக்கர் பகுதி எரிந்த நிலையில், 11 சதவீதம் மட்டுமே அணைக்கப்பட்டு உள்ளது. ஈட்டன் மற்றும் அல்டெண்டா பகுதிகளில் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் எரிந்தது. 15 சதவீதம் பகுதிகளில் மட்டுமே தீ அணைக்கப்பட்டது. ஹாலிவுட் மலைப் பகுதியில் உள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக கட்டடங்கள் உட்பட 5,300 கட்டடங்கள் அழிந்தன. காரணம்மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக, வறண்ட புதர் மண்டிய நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசும் கடுமையான காற்று ஆகியவை தீப்பிடிக்க காரணமாக கூறப்பட்டது. லாஸ் ஏஞ்சலிசில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையே காரணம் என உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுனர். மேலும் இப்பகுதியில் ஏற்படும் 95 சதவீதம் காட்டுத்தீ மனிதர்களால் ஏற்படுகிறது என்றும் தற்போதைய தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது அறியப்படவில்லை.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia