அடி (யாப்பிலக்கணம், எழுத்தெண்ணிக்கை)நாம் அடியெடுத்து நடந்து ஓர் இடத்தை அடைகிறோம். அதுபோலப் பாட்டு அடியெடுத்து நடந்து ஒரு பொருளைத் தரும். நாம் நடக்கும் தப்படிகள் நீண்டும் குறைந்தும் இருக்கும். அதுபோலப் பாட்டின் அடிகளும் இருக்கும். எழுத்தெண்ணிக்கை அளவுகோல்தொல்காப்பியம் ஒவ்வோர் அடியிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளது. அவற்றை 17 வகையான நிலம் எனக் குறிப்பிடுகிறது.
17 நில அடிகள்குறளடிகுறளடி 4 முதல் 6 எழுத்துக்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுகள்:[1]
தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து
குன்று கொண்டு நின்ற மாடு
ஆறு சூடி நீறு பூசி
சிந்தடி7 முதல் 9 எழுத்துக்கள் கொண்டது சிந்தடி.[2]
போது சாந்தம் பொற்ப வேந்தி
தடந்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூம்
9 எழுத்து அடி - கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி [4] நேரடி10 முதல் 14 எழுத்து அமைந்த அடி நேரடி[5]
நெடிலடி15 முதல் 17 எழுத்து அமைந்த அடி நெடிலடி [11]
கழிநெடில் அடி18 முதல் 20 எழுத்து அமைந்த அடிகளைக் கொண்டது கழிநெடிலடி.[15]
சீர் எண்ணிக்கை அளவுகோல்அமுதசாகரர் எனவும், அமிர்தசாகரர் எனவும் குறிப்பிடப்படும் ஆசிரியர் (காலம் 1070-1120) தமது யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களில் ஒவ்வோர் அடியிலும் அமந்துள்ள சீர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். இவரே தாம் முதலில் எழுதிய அமுதசாகரம் என்னும் யாப்பிலக்கண நூலில் தொல்காப்பியத்தை நெறியில் பாடல் அடி ஒவ்வொன்றிலும் உள்ள எழுத்துக்களின் அளவுகோலாகக் கொண்டு அடிகளுக்குப் பெயர் சூட்டியுள்ளார். அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia