அடினோ அதிநுண்ணுயிரிகள்
![]() அடினோ நச்சுயிரிகள் (Adenoviruses) அல்லது அண்ணவக நச்சுயிரிகள் எனும் ( அடினோவிரிடே உயிரியல் குடும்ப உறுப்பினர்கள்) நடுத்தர உருவளவு (90–100 மீநுண்மீட்டர்(மீநுண் மீ)), உறையற்ற ( புறக் கொழுப்பு இரட்டை அடுக்கில்லாத) நச்சுயிரிகள் ஆகும். இவை இரட்டைப்புரி டி.என்.ஏ. க்களைக் கொண்ட மரபன்தொகையின; இவை ஐக்கோசாஃஎடிரல் கட்டமைப்புள்ள உட்கருவன் கேப்சிடுகளைக் கொண்டுள்ளன.[2] அடி மூக்குச் சதை அல்லது அண்ணச் சதையில் இருந்து முதன் முதலில் 1953 இல் கண்டுபிடிக்கப்பட்தால் இதற்கு அண்ணவக(அடினோ) நச்சுயியிரி என்று பெயர் ஏற்பட்டது.[3] இவை பல முதுகென்பி விலங்கு ஓம்பிகளில் காணப்படுகின்றன; மாந்தரில் இவை 50 வெவ்வேறுவகைத் திரிபுகளில் அகல்விரிவான பல்வகைத் தொற்றுகளை உருவாக்குகின்றன; இவை இளஞ்சிறாரில் காண்ப்படும் தடிமன் போன்ற எளிய மூச்சுயிர்ப்புத் தொற்றுகளில் இருந்து உயிரைப் போக்கும் அச்சுறுத்தல் மிக்க, இயல்பு எதிப்பாற்றலை நலிவிக்கும் பல்லுறுப்புத் தாக்க நோய்களை உருவாக்கும் தொற்றுகள் வரை அமைகின்றன.[2] நச்சுயிரியியல்வகைபாடுஇக்குடும்பத்தில் பின்வரும் பேரினங்கள் உள்ளன:[4]
அடினோ நச்சுயிரியின் தன்மைஅடினோ நச்சுயிரிகள் 360 செல்சியஸ் வெப்பநிலையில் ஏழு நாட்கள் வரை உயிரோடிருக்கும். 40 செல்சியசில் எழுபது நாட்கள் வரை உயிரோடிருக்கும். ஆனால் 560 செல்சியசில் இரண்டரை மணித்துளிகளில் அழிக்கப்படுகின்றன. அடினோ நச்சுயிரியில் நான்கு வகை எதிர்பொருட்கள் உள்ளன. அவை எதிர்பொருள் Aஇ, எதிர்பொருள் Bஇ, எதிர்பொருள் Cஇ, எதிர்பொருள் Pஇ எனப்படும். அடினோ நச்சுயிரிகள் சிவப்புக் குருதி அணுக்களை ஒன்று சேர்க்கும் தன்மை உடையன. அடினோ நச்சுயிரிகள் பரவும் முறைஇவை காற்றிலும், நோய்வாய்ப்பட்ட உடல் உறுப்புகளைத் தொடும்போதும் பரவுகின்றன. நோய்கள்
மேல்தொண்டை அழற்சிஇந்தவகையில் காய்ச்சல், நீரக்கோப்பு, இருமல் முதலிய நோய்க் குறிகள் ஏற்படும். கடும் நுரையீரல் நோய்இந்த வகையில் காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைக் கமறல் முதலியன ஏற்படும். குளிர்காய்ச்சல்இந்தவகையில் நுரையீரல் தாக்கப்பட்டுக் காய்ச்சல், இருமல் முதலியன ஏற்படும். கடும் கண்நோய்இது வழக்கமாக வயது வந்தவர்களிடம்தான் காணப்படுகின்றது. முதலில் ஒரு கண் தாக்க்கப்பட்டுப் பிறகு மற்றொரு கண் தாக்க்கப்படுகிறது. கண்கள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். விழி வெளிப்படல அழற்சிஇந்த நோய் ஒரு தொற்று நோய் போல் பரவக் கூடியது. இது பற்றவைத்தல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் ஏற்படுகின்றது. ஏனெனில் இவர்கள் தொழிலில், கண் விழி ஒளிப்படலம் எனப்படும் திரையில் சிறு காயங்கள், தூசியினாலோ, சிறு உலோகத் துண்டுகளினாலோ ஏற்பட்டு இப்புண்களின் மூலம் காற்றில் உள்ள அண்ணவக(அடினோ) நச்சுயிரிகள் கண்ணில் புகும். நோய்த் தடுப்பு முறைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia