அத்தாணி சந்திரசேகரர் கோயில்

அத்தாணி சந்திரசேகரர் கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் ஈரோடு மாவட்டத்தில் அத்தாணி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக சந்திரசேகரர் உள்ளார். இங்குள்ள இறைவி ஆனந்தவல்லி ஆவார். சிவராத்திரி, மார்கழி திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. [1]

அமைப்பு

இருநிலைக் கோபுரங்களைக் கொண்ட இக்கோயிலின் மூலவர் சுயம்புவாக உள்ளார். திருச்சுற்றில் நவக்கிரகங்கள், விநாயகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் உள்ளனர். சந்திரசேகரருக்கு முன் உள்ள லிங்கத்திருமேனியைச் சுற்றி ஐந்து தலையுடைய நாகம் உள்ளது. [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya