அந்தோனிக்குட்டி அண்ணாவியார்

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் என்பவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கிறித்தவக் கவிஞர் ஆவார். இவர் பிறந்த இடம் தூத்துக்குடி என்றும் மணப்பாடு என்ற கடலோர கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.


இயற்றிய நூல்கள்

அந்தோனிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய நூல்கள் கீழ்வருவன:

  • பேரின்பக் காதல்
  • பாலத்தியானம்
  • பச்சாத்தாபம்
  • தன்மேற்சுமத்தல்
  • ஆபத்து பத்து
  • ஆசைப்பத்து
  • ஆராதனைப் பிரகாசம்
  • அருள்வாசகம்
  • ஞானத் திருப்புகழ்
  • திருப்புகழ்
  • ஆனந்த மஞ்சரி
  • அன்னையின் பிரலாப வண்ணம்
  • இயேசுநாதர்சுவாமி பாடுகள்மேல் பரணி
  • தேவமாதாவின் பேரில் கொச்சகக் கலிப்பா
  • இயேசுநாதர் பேரில் கொச்சகக் கலிப்பா

என்பன.

கவிதையில் வாழ்க்கையின் பிரதிபலிப்பு

அண்ணாவியாரின் வாழ்க்கை தொடக்கத்தில் நெறிபிறழ்ந்து இருந்தது என்பதையும் ஓர் அற்புத நிகழ்ச்சியால் மனமாற்றம் பெற்று இறைநெறியைச் சார்ந்து அருட்பாடல்கள் பலவற்றைப் புனைந்தார் என்பதையும் ஒரு பாடல்வழி அறிய முடிகிறது:

"தரத்தயை செய்வாய் - தரத்தயை செய்வாய் தரத்தயை செய்வாய்
இரக்கமுள்ள மாதாவே - இராசகுலக் கன்னிகையே
எங்கள் பேரிலுள்ள - அன்பினால் உமது
செங்கைமேவுதிரு - மைந்தனாரை
ஞான சொரூபியான நல்ல மகவைப் பாவ
ஈனன் தொட வெண்ணாதென்று எண்ணுகிறீரோ தாயே
ஏனை உயிரும் காக்கும் ஞானக்குழந்தை நல்
இரக்கப் புனலில் நன்றாய்க் குளித்து முழுகிப் பாவ
அழுக்கைத் துடைத்து மகா ஒழுக்கத்துடனே வந்தேன்"

நூல் ஆதாரம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya