அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கீரமங்கலம்கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (G.B.H.S.S.KEERAMANGALAM) தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.[1][2] இப்பள்ளி 1933 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு 6 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1997 ஆம் ஆண்டு வரை இது இருபாலர் பயிலும் மேல்நிலைப்பள்ளியாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு முதல் இது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ் பயிற்று மொழியாக உள்ளது. இந்த அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றியடைந்து மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.[3] பள்ளிக்கு என அரசு கட்டடம் உள்ளது. போதனை நோக்கங்களுக்காக 8 வகுப்பறைகளும் பிற பணிகளுக்காக மேலும் 2 அறைகளும் செயல்படுகின்றன. பள்ளிக்கு என ஓரு விளையாட்டு மைதானமும் நூலகமும் உள்ளன. பள்ளி நூலகத்தில் 7815 புத்தகங்கள் உள்ளன.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia