அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவுடையார்கோயில்அரசு மேல்நிலைப் பள்ளி, ஆவுடையார்கோயில் (G.H.S.S,AVUDAIYARKOIL) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1] பள்ளி1964 ஆம் ஆண்டு சூலை மாதம் ஓர் உயர்நிலைப்பள்ளியாக இப்பள்ளி தொடங்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு சூலை மாதம் நான்காம் தேதியன்று ஒரு மேல்நிலைப்பள்ளியாக பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. மேல்நிலையில் ஏழு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. கல்வி கற்பித்தல் தவிர பள்ளியில் பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.[2] பள்ளி பல்வேறு பண்முகத்தன்மைகளை கொண்டு விளங்குகிறது. நிர்வாகம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர், தலைமையாசிரியர் முதலானோரின் மேற்பார்வையில் பள்ளிக்கல்வி செயல்பாடுகள் நடைபெறுகின்றன. பள்ளி மாணவர்கள் கற்றலில் தனிக்கவனமுடனும் கலை கைத்தொழில் போன்றவற்றில் சிறப்புத் தன்மையும் பெற்று விளங்குதலை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia