அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்)அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது.[1] பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது. வாழ்த்துரைஇந்நூலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள் மற்றும் வானதி பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் ஏ. திருநாவுக்கரசு ஆகியோரின் வாழ்த்துரைகள் இடம் பெற்றிருக்கின்றன. கட்டுரைகளின் இடையிடையே ஓவியர் சில்பி அவர்களின் அழகிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளது. பாகம் 1பாகம் 1ல் உள்ள கட்டுரைகளின் தலைப்புகள்: மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia