இந்திய வங்கதேச நட்புப் பூங்கா
![]() ![]() ![]() ![]() ![]() பாரத்-பங்காளதேசஷ் மைத்ரி உத்யன் எனப்படும் இந்திய வங்கதேச நட்புப் பூங்கா (வங்காள மொழி: ভারত-বাংলা মুক্তি মৈত্রী পার্ক, lit. 'India-Bangladesh Friendship Park') என்பது இந்தியாவின், திரிபுராவின், சோட்டகோலாவில் அமைந்துள்ள ஒரு பூங்காவாகும். வங்கதேச விடுதலைப் போரின்போது இப்பகுதியானது விடுதலைப் போராளிகளின் அடிப்படை முகாம்களில் ஒன்றாக இருந்தது. இங்கிருந்து அவர்கள் சிட்டகொங், கொமிலா, பெரிய நவகாளியில் பாக்கித்தான் இராணுவத்திற்கு எதிராக கொரில்லாப் போரைத் தொடங்கினர். [1] அமைவிடம்பன்னாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மைத்ரி உத்யன் எனப்படும் நட்புப் பூங்கா, விடுதலைப் போரின் போது உயிர் ஈகம் செய்த வங்காளதேச விடுதலைப் போராளிகள் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சோட்டாகோலாவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு போர் அருங்காட்சியகம், சிறு குன்றுகள், பசுமையான பள்ளத்தாக்குகள், ஏரிகள், தாவரங்கள், சிற்பங்கள், வங்காளதேச விடுதலைப் போராட்ட வீரர்களின் கல்லறைகள் என பல்வேறு கூறுகளுடன், இது ஒரு பூங்கா மட்டுமல்ல, அதை விடவும் சிறப்புமிக்கதாக உள்ளது. [2] வரலாறுவிடுதலைப் போரில் தீவிரமாக ஈடுபட்ட பகுதியாகையால் இந்த நினைவுப் பூங்கா திரிபுரா மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு முழு ஆதரவை வழங்கினர். மேலும் சுமார் 1.6 மில்லியன் மக்களுக்கு அடைக்கலம் அளித்தனர். இது மாநிலத்தின் அப்போதைய மக்கள் தொகையை விட கூடுதலாகும். திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோட்டாகோலா, 1971 இல் திரிபுராவில் உள்ள 11 போர்முனை முகாம்களில் ஒன்றாக செயல்பட்டது. 20 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள இந்தப் பூங்கா இயற்கை ஏரியால் ஓரளவு பிரிக்கப்பட்ட ஏழு குன்றுகளை உள்ளடக்கியது. இது விடுதலைப் போரின் போது தீவிர செயல்பாடுகளைக் கண்ட இடமாகும். 1971 இல் கட்டப்பட்ட பல பதுங்கு குழிகள், அகழிகளின் எச்சங்களின் வடிவத்தில் இங்கு நினைவுச்சின்னங்களை இன்றும் உள்ளன. [3] திறப்புதிசம்பர் 16 வங்கதேசத்தின் வெற்றி நாளன்று இந்திய மற்றும் வங்கதேசக் கலைஞர்கள், அறிவுஜீவிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் முன்னிலையில் திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த நினைவுச் சின்னத்தையும் பூங்காவையும் திறந்து வைத்தார். 11 நவம்பர் 2010 அன்று அப்போதைய வங்கதேசத்தின் கல்வி அமைச்சர் திபு மோனி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். சிலைகள்
ஓவியர்களும் சிற்பிகளும்திரிபுரா மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இதன் உருவாக்கத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் படைப்புகளான சிலைகள் முதல் ஓவியங்கள் வரையிலான பொருட்களைக் கொண்டு நினைவகத்தை செழுமைப் படுத்தியுள்ளனர். வங்கதேச ஓவியர்களும், சிற்பிகளும்பூங்காவில் சிற்பங்களால் நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவு பூங்கா வங்கதேசத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவர்கள் போராடி வென்ற விடுதலையின் வரலாற்றையும், நாட்டின் விடுதலையை அடைய இரண்டு நட்பு அண்டை நாடுகளும் எவ்வாறு இணைந்து பணியாற்றின என்பதையும் அறிய உதவுவதாக உள்ளது. [7] [8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia