இந்தியப் பாரம்பரிய இசைஇந்தியப் பாரம்பரிய இசை (Indian classical music) என்பது இந்திய துணைக் கண்டத்தின் பாரம்பரிய இசையாகும்.[1] இது இந்துஸ்தானி இசை எனப்படும் வட இந்திய பாரம்பரிய இசை மற்றும் கருநாடக இசை எனப்படும் தென்னிந்திய வெளிப்பாடு என்ற இரண்டு முக்கிய மரபுகளைக் கொண்டுள்ளது. இந்த மரபுகள் சுமார் 15 ஆம் நூற்றாண்டு வரை வேறுபடவில்லை. இந்திய துணைக்கண்டத்தின் முகலாயர் ஆட்சியின் போது, மரபுகள் பிரிந்து தனித்தனி வடிவங்களாக உருவெடுத்தன. இந்துஸ்தானி இசை ஒரு இராகத்தின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துதல் மற்றும் ஆராய்வதை வலியுறுத்துகிறது.[2] அதே நேரத்தில் கருநாடக இசை நிகழ்ச்சிகள் குறுகிய கலவை அடிப்படையிலானதாக இருக்கும். இருப்பினும், இரண்டு அமைப்புகளும் வேறுபாடுகளைக் காட்டிலும் பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. [3] இந்தியாவின் பாரம்பரிய இசையின் வேர்கள் இந்து மதத்தின் வேத இலக்கியத்திலும், பரத முனிவரின் கலைகள் பற்றிய உன்னதமான சமசுகிருத நூலான பண்டைய நாட்டிய சாத்திரத்திலும் காணப்படுகின்றன.[4][5] சாரங்கதேவரின் 13-ஆம் நூற்றாண்டின் சமசுகிருத உரையான சங்கீத- ரத்னாகரம் இந்துஸ்தானி இசை மற்றும் கருநாடக இசை மரபுகள் இரண்டிற்குமான உறுதியான உரையாகக் கருதப்படுகிறது.[6][7] இந்தியப் பாரம்பரிய இசை என்பது எப்போதும் உருவாக்கப்பட்ட சிக்கலான மற்றும் முழுமையான இசை முறைகளில் ஒன்றாகும். மேற்கத்திய பாரம்பரிய இசை போன்று, இது அட்டமசுரத்தை 12 அரைத்தொனிகளாகப் பிரிக்கின்றது. இதில் ச ரி க ம ப த நி ச ஆகிய 7 அடிப்படை சுவரங்களை கொண்டது. இருப்பினும், இது வெறும் ஒலிவேறுபாடு இசைவைப் பயன்படுத்துகின்றது. பெரும்பாலான நவீன மேற்கத்திய பாரம்பரிய இசையைப் போன்றில்லாமல், இது சமமான மனப்போக்கு இசைவு முறையைப் பயன்படுத்துகின்றது. இந்தியப் பாரம்பரிய இசையானது இயல்பில் ஒற்றை குரலொலியிலும் மற்றும் ஒற்றை மெல்லிசை வரிசை அடிப்படையிலும் உள்ளது. இது நிலையான ரீங்காரத்தில் இசைக்கப்படுகின்றது. பாடும் திறனானது மெல்லிசை ரீதியாக குறிப்பிட்ட ராகங்கள் மற்றும் சந்தம் ரீதியாக தாளங்கள் அடிப்படையிலானது. இசைக்குறிப்பு முறைஇந்தியப் பாரம்பரிய இசையில் இராகம் மற்றும் தாளம் என்ற இரண்டு அடிப்படைக் கூறுகள் உள்ளன. இராகம், சுரங்களின் மாறுபட்ட தொகுப்பை அடிப்படையாகக் கொண்டது (குறிப்புகளுடன் நுண் தொனிகள் உட்பட), ஆழமான சிக்கலான மெல்லிசை அமைப்பை உருவாக்குகிறது. அதே நேரத்தில் தாளம் கால சுழற்சியை அளவிடுகிறது.[8] இராகம் ஒரு கலைஞருக்கு ஒலிகளிலிருந்து மெல்லிசையை உருவாக்க ஒரு வெளியைக் கொடுக்கிறது, அதே நேரத்தில் தாளம் அவர்களுக்கு நேரத்தைப் பயன்படுத்தி தாள மேம்பாட்டிற்கான ஒரு ஆக்கபூர்வமான கட்டமைப்பை வழங்குகிறது.[9][10][11] இந்திய பாரம்பரிய இசையில் குறிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி பெரும்பாலும் குறிப்புகளை விட முக்கியமானது. மேலும் இது பாரம்பரியமாக மேற்கத்திய பாரம்பரிய கருத்துகளான ஒத்திசைவு, பண்ணிசை போன்றவற்றைத் தவிர்க்கிறது[12][13][14] வரலாறுபண்டைய இந்தியாவில் இசையின் வேர் இந்து மதத்தின் வேத இலக்கியங்களில் காணப்படுகிறது. ஆரம்பகால இந்திய சிந்தனை வாத்யம், கீதம், மற்றும் நடனம் ஆகிய மூன்று கலைகளை இணைத்தது.[15] இந்தத் துறைகள் வளர்ச்சியடைந்ததால், சமகால இசைக்கு சமமான வடிவத்தில் சங்கீதம் ஒரு தனித்துவமான கலை வகையாக மாறியது. இது யாஸ்கர் (கி.மு. 500) காலத்திற்கு முன்பே நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் அவர் பண்டைய இந்திய பாரம்பரியத்தின் ஆறு வேதாங்கங்களில் ஒன்றான தனது நிருக்த ஆய்வுகளில் இந்த சொற்களை உள்ளடக்கியுள்ளார். இந்து மதத்தின் சில பண்டைய நூல்களான சாம வேதம் (கி.மு. 1000) முற்றிலும் மெல்லிசைக் கருப்பொருள்களுக்குக் கட்டமைக்கப்பட்டுள்ளது.[16][17] இது இருக்கு வேதத்தின் இசைப் பகுதிகளாகும்.[18] சாமவேதம் இரண்டு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி இசை அளவுகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று சடங்குகளின் நோக்கம்.[19] ![]() முக்கிய மரபுகள்பண்டைய மற்றும் இடைக்கால இந்திய துணைக்கண்டத்தின் பாரம்பரிய இசை பாரம்பரியம் (நவீன வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான்) 14 ஆம் நூற்றாண்டில் பொதுவாக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. அதன் பிறகு தில்லி சுல்தானகத்தின் சகாப்தத்தின் சமூக-அரசியல் கொந்தளிப்பு வடக்கை தெற்கிலிருந்து தனிமைப்படுத்தியது.[2] வட மற்றும் தென்னிந்தியாவின் இசை மரபுகள் சுமார் 16 ஆம் நூற்றாண்டு வரை வேறுபட்டதாகக் கருதப்படவில்லை. ஆனால் அதன் பிறகு மரபுகள் தனித்துவமான வடிவங்களைப் பெற்றன. வட இந்திய பாரம்பரிய இசை இந்துஸ்தானி என்று அழைக்கப்படுகிறது. அதே சமயம் தென்னிந்திய வெளிப்பாடு கருநாடக இசை என்று அழைக்கப்படுகிறது (சில நேரங்களில் கர்நாடக இசை என்றும் உச்சரிக்கப்படுகிறது). லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவின் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசை பேராசிரியரா நசீர் அலி ஜெய்ராஜ்போயின் கூற்றுப்படி, வட இந்திய பாரம்பரியம் அதன் நவீன வடிவத்தை 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பெற்றது.[21] முக்கிய இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசையில் உள்ள இரண்டு முதன்மையான போக்குகள்:
இந்துஸ்தானிய இசை![]() கியால் மற்றும் துருபாத் ஆகிய இரண்டும் இந்துஸ்தானிய இசையின் இரண்டு முதன்மை வடிவங்களாகும். எனினும் பல பிற மரபு ரீதியான மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த வடிவங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையை வேறுபடுத்தும் செயல்முறை எப்போது தொடங்கியது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 14 ஆம் நூற்றாண்டு தில்லி சுல்தான்களின் அவைகளில் இந்த செயல்முறை தொடங்கியிருக்கலாம். இருப்பினும், ஜெய்ராஜ்போயின் கூற்றுப்படி, வட இந்திய பாரம்பரியம் அதன் நவீன வடிவத்தை 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு அல்லது 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பெற்றிருக்கலாம். மென்மையான காதல், இயற்கை மற்றும் பக்திப்பாடல்கள் ஆகியவை இந்துஸ்தானி இசையின் முதன்மைக் கருப்பொருள்களாகின்றன. அக்பரின் ஆட்சியின் போது இந்துஸ்தானி இசையின் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. இந்த 16 ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில், தான்சேன் குவாலியரின் இந்து மன்னன் இராம் சந்தின் ஆதரவுடன் தனது வாழ்க்கையின் முதல் அறுபது ஆண்டுகள் இசையைப் பயின்றார்.[22][23] மேலும் இசைப் புதுமைகளை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அக்பரின் முஸ்லிம் அவையில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். பல இசைக்கலைஞர்கள் தான்சேனை இந்துஸ்தானி இசையின் நிறுவனர் என்று கருதுகின்றனர்.[24] கச்சேரியானது வழக்கமாக ராகத்தின் மெதுவான விரிவுபடுத்தலுடன் தொடங்குகின்றது, இது பாதாத் என்று அறியப்படுகின்றது. இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம். இராகம் நிலைநிறுத்தப்பட்டவுடன், சந்தமுள்ளதாக மாற பாடல் முறையைச் சுற்றிலும் இசை அலங்கரிப்பு தொடங்கி, மெதுவாக வேகமும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிவானது துருத் அல்லது ஜோர் என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர். மேலும் கர்நாடக இசை போன்றே இந்துஸ்தானிய இசையும் தன்னகத்தே பல்வேறு நாட்டுப்புற இசைகளையும் கொண்டுள்ளது. கர்நாடக இசைஇந்து சமயத்தைச் சேர்ந்த துறவியும் கிருஷ்ணப் பக்தருமான புரந்தரதாசர் (1484-1564) விஜயநகரப் பேரரசின் அம்பியில் வாழ்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார்.[25][26] அவர் கர்நாடக இசையின் பிதாமகன் என்று கருதப்படுகிறார். [25] அவர் பாரம்பரிய இந்திய இசைக் கோட்பாட்டை முறைப்படுத்தினா. மேலும், இசைக்கலைஞர்கள் தங்கள் கலையை கற்கவும் முழுமையாக்கவும் பயிற்சிகளை உருவாக்கினார். அவர் தனது கருத்துக்களைப் பகிர்வதிலும் கற்பிப்பதிலும் பரவலாக பயணம் செய்தார். மேலும் ஏராளமான தென்னிந்திய மற்றும் மகாராட்டிரா பக்தி இயக்க இசைக்கலைஞர்களை ஈர்த்தார். இந்தப் பயிற்சிகள், இராகத்தைப் பற்றிய அவரது போதனைகள் மற்றும் சூலடி சப்த தாளம் (அதாவது, "ஆதிமாத ஏழு தாளங்கள்") எனப்படும் அவரது முறையான வழிமுறைகள் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன.[27] 16 ஆம் நூற்றாண்டில் புரந்தர தாசரின் முயற்சிகள் இந்திய பாரம்பரிய இசையின் கர்நாடக பாணியைத் தொடங்கின [28] ![]() தென்னிந்தியாவில் இருந்து வரும் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசையை விட தாள ரீதியில் தீவிரமானதாகவும் கட்டமைக்கப்பட்டதாகவும் இருக்கும். இராகங்களை மேளகர்த்தாக்களாக தர்க்கரீதியாக வகைப்படுத்துவது மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் போன்ற நிலையான இசையமைப்புகளைப் பயன்படுத்துவது இதற்கு எடுத்துக்காட்டுகள். கர்நாடக ராக விரிவுகள் பொதுவாக தாளகதியில் மிக வேகமாகவும், இந்துஸ்தானி இசையில் அவற்றிற்கு நிகரானவைகளைக் காட்டிலும் குறைவாகவும் இருக்கும். கூடுதலாக, இந்துஸ்தானி கச்சேரிகளை விட கர்நாடக கச்சேரிகளில் பக்க வாத்தியங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இன்றைய வழக்கமான கச்சேரி அமைப்பு பாடகர் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரால் அமைக்கப்பட்டது. தொடக்கப் பகுதி வர்ணம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது இசைக்கலைஞர்களுக்கு ஒரு தயார் படுத்தும் நிலையாகும். ஒரு பக்தியும் ஆசீர்வாதத்திற்கான கோரிக்கையும் பின்தொடர்கிறது. பின்னர் இராகங்கள் (அளவிடப்படாத மெல்லிசை) மற்றும் தனம் இடையே தொடர்ச்சியான பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இது கிருதிகள் எனப்படும் கீர்த்தனைகளுடன் கலந்துள்ளது. இராகத்தில் இருந்து பல்லவி அல்லது கரு பின்தொடர்கிறது. கர்நாடக இசையானது அதன் மேம்பாட்டில் இந்துஸ்தானிய இசையைப் போன்றே உள்ளது (இசை மேம்பாடு, காண்க). வணங்குதல், கோயில்களின் விவரங்கள், தத்துவம், நாயகன்-நாயகி கருப்பொருள்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் உள்ளிட்டவை முதன்மைக் கருப்பொருள்களாகும். தியாகராஜர் (1759-1847), முத்துசுவாமி தீட்சிதர் (1776-1827) மற்றும் சியாமா சாஸ்திரிகள் (1762-1827) ஆகியோர் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாவர். எலினோர் ஜெலியட்டின் கூற்றுப்படி, தியாகராஜர் கர்நாடக பாரம்பரியத்தில் அதன் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மேலும் அவர் புரந்தர தாசரின் செல்வாக்கை பயபக்தியுடன் ஒப்புக்கொண்டார். ஒரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், கர்நாடக இசையானது பாரம்பரிய இசைக்கு மிகவும் பழமையான மற்றும் நேர்த்தியான அணுகுமுறையைக் குறிக்கிறது. அதேசமயம் இந்துஸ்தானி இசை வெளிப்புற தாக்கங்களால் உருவாகியுள்ளது.[29] இசைக்கருவிகள்சித்தார், சரோட், தம்புரா, பன்சூரி, சேனை, சாரங்கி, சந்தூர் மற்றும் தபலா, செனாய், வயலின் உள்ளிட்டவை இந்துஸ்தானிய இசையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள். வேணு, கோட்டு வாத்தியம், ஆர்மோனியம், வீணை, நாதசுவரம், மிருதங்கம், கஞ்சிரா, கடம் உள்ளிட்டவை கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் ஆகும். சான்றுகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இந்தியப் பாரம்பரிய இசை
|
Portal di Ensiklopedia Dunia