இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும்.
இராசேந்திர சோழன் (Rajendra Chozhan, 17, திசம்பர், 1945 - இறப்பு: 1, மார்ச், 2024) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும், அரசியல் செற்பாட்டாளரும் ஆவார். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அஷ்வகோஷ் என்ற புனைப்பெயரிலும் எழுதிவந்தார். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதினார். மார்க்சியப் பார்வை கொண்ட இவர்[1] பின்னர் தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப்பார்வை கொண்டவராக மாறினார். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும்; அரசியல், அறிவியல், தத்துவம், போராட்டம் எனப் பொதுவாழ்விலுமாக இயங்கினார்.[2][3]
வாழ்க்கைக் குறிப்பு
இராசேந்திரசோழன் தென்னாற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டையில் 1945 திசம்பர் 17 அன்று பிறந்தார்.[4][5] பெற்றோர் இருவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.[5] பள்ளி ஆசிரியராக இருபத்து ஒரு ஆண்டுகள் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசித்து வந்தார். பாதல் சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.[4] அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் பல நாடகங்களை எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவிலக்கியங்கள் மட்டுமின்றி, மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பின்நவீனத்துவம் போன்றவற்றில் முக்கியமான அரசியல் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.
இக்கதைகளை (1) அரசியல் இயக்கப் பகடி அங்கதக் கதைகள் (1985-2011 காலப்பகுதியில் எழுதப்பட்டவை), (2) காமத்திளைப்புப் பாலியல் கதைகள் (உட்பிரிவு: அ. பாலியல் தொழிலாளி கதைகள், ஆ. இருபால் அத்துமீறல் கதைகள்), (3) நவீன - பின்நவீன யதார்த்தக்கூறுகள் என பேராசிரியர் வே. மு. பொதியவெற்பன் பகுக்கிறார்.[6] மேலும் அவற்றை (1) விமர்சன யதார்த்தவாதக் கதைகள், (2) இலக்கிய யதார்த்த கதைகள்
குறுநாவல்கள்
உறவு பந்தம் பாசம்
சிறகுகள் முளைத்து; முதற்பதிப்பு: 1988 சனவரி, சரவணபாலு பதிப்பகம், 33-இ, கீழ செட்டி தெரு, விழுப்புரம், பக்.146+54); இரண்டாம் பதிப்பு: 2018 தமிழினி, சென்னை
சீட்டாட்டக்கலைஞன்
மகாலட்சுமி (தமிழினி இணைய இதழ்)
பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் (1997)
விதிகள் . . . விதிகள் . . .
வேட்கை
21-வது அம்சம்
நாடகங்கள்
தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
நாளை வரும் வெள்ளம்
மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
மீண்டும் வருகை
வட்டங்கள்
விசாரணை
(அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் எழுதிய இராசேந்திரசோழன் எழுதிய 12 நாடகங்கள் "அஸ்வகோஷ் நாடகங்கள்" என்ற நூலாக வெளிவந்துள்ளன.)
நாவல்
காவலர் இல்லம், 2019, தமிழினி
பதியம், 2023, பக்.224, தமிழினி
பகட்டுரைகள்
சிவப்பு காவிகள் (உதயம், சூன் 15,197?)
தோப்புகளில் தனிமரமாய் (பின்னுரை)
முக்காட்டு முகங்கள் (பின்னுரை)
சிறுகதைத்தொகுதிகள்
எட்டுக் கதைகள், க்ரியா பதிப்பகம்
சீட்டாட்டக் கலைஞன்,2022, தமிழினி
தற்செயல் (1994)
பறிமுதல் (1979)
இராசேந்திரசோழன் கதைகள் (இருதொகுதிகள்), 2022, தமிழினி