இராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:தென்காசி சாலை, புதுப்பாளையம், இராஜபாளையம், இராஜபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:இராஜபாளையம்
மக்களவைத் தொகுதி:தென்காசி
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேசுவர்
தாயார்:மீனாட்சி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி, நவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இராசபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுந்தரேசுவர், மீனாட்சி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகன், ஐயப்பன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட அரசகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிருவகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. மாசி மாதம் தெப்பத்திருவிழா திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya