இராபர்ட் புருசு ஃபூட்
இராபர்ட் புருசு ஃபூட் (Robert Bruce Foote, செப்டம்பர் 22, 1834 - டிசம்பர் 29, 1912)[1] என்பவர் பிரித்தானிய நிலவியல் வல்லுனரும், தொல்பொருள் ஆய்வாளரும் ஆவார். "வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா" பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அதிரம்பாக்கத்தில் நிலப்பொதியியல் மதிப்பீட்டுக்காகப் பல கற்காலத் தொல்லியல் ஆய்வுகளைச் செய்தவர். 1863 ஆம் ஆண்டில் இவரது தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பமாயின, முதன் முதலாக பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரி ஒன்றை தமிழ்நாட்டில் சென்னைக்கருகில் பல்லாவரம் பகுதியில் கண்டுபிடித்தார்[2]. இக்கண்டுபிடிப்பின் பின்னர், இவர் வில்லியம் கிங் என்பவருடன் இணைந்து, தென்னிந்திய, மற்றும் மேற்கிந்தியாவில் இவ்வாறான பல பொருள்களைக் கண்டுபிடித்தார். 1884 ஆம் ஆண்டில் 3.5 கி.மீ. நீள பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டாவது நீளமான குகை ஆகும்.[3] ஃபூட் தனது 24வது அகவை தொடக்கம் மொத்தம் 33 ஆண்டுகள் நிலவியல் ஆய்வுகளை நடத்தினார். இராபர் ஃபூட் தனது இந்தியப் பங்களிப்புகளை நினைவுக் குறிப்புகளாக எழுதி 12 பாகங்களாக வெளியிட்டார். இந்திய நிலவியல் ஆய்வுக் கழகம் "Geological Features of the South Mahratta Country and Adjacent Districts" (மகாராட்டிரம், கருநாடகம், ஆந்திரப்பிரதேச மாநிலங்கள்) என்ற தலைப்பில் 1876 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia