இருதாலய மருதப்பத் தேவர்இருதாலய மருதப்பர் என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் ஊத்துமலையை ஆண்ட நிலகிழார்(ஜமீன்தார்) ஆவார். [1] இவரது சிலை நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்திற்கு அருகே அமைந்துள்ளது. இவரது முன்னோர்கள் விசுவநாதர் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்களாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சமீன்தாரர்களாகவும் வீற்றிருந்து ஊத்துமலையை ஆண்டு வந்தனர். மருதப்பர் என்பது இச்சமீன் தலைவர்களுக்கெல்லாம் பொதுப்பெயர். மருதப்பர் என்பது அம்பை வட்டத்தைச் சேர்ந்த திருப்புடைமருதூர் என்னும் தலத்திலுள்ள இறைவன் பெயராகும். இவர்கள் கொல்லம் ஆண்டு 349 முதல் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழாவை சிறப்பாக நடத்தி வந்தனர். புலவர் போற்றும் புரவலர்அண்ணாமலை ரெட்டியார், புளியங்குடி முத்துவீரக் கவிராயர், கடிகை முத்துப்புலவர், மாம்பழக் கவிச்சிங்கக் கவிராயர் முகவூர் கவிராயர்கள், சங்கர நமச்சிவாயர் உட்பட ஏராளமான புலவர்கள் இவரைப் போற்றிப் பாடியுள்ளனர். இவர் சங்கர நமச்சிவாயரைக் கொண்டு நன்னூலுக்கு உரை எழுதுவித்தார்.[2] உ. வே. சாமிநாதையர் இருதாலய மருதப்ப தேவரின் அன்றாட பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் என் சரித்திரம் என்ற தமது வாழ்க்கை வரலாற்று நூலில் புகழ்ந்துள்ளார். காவடிச் சிந்துஇருதாலய மருதப்பர் கழுகுமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுக்கும் போது வழிநடை களைப்பு தெரியாமல் இருப்பதற்காக அண்ணாமலை ரெட்டியார் பாடிய பாடல்கள் காவடி சிந்து என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடப் பெற்றது. [3] இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை, இறைபக்தி பற்றியும் விவரித்து எழுதப்பட்டுள்ளது. மேற்கோள்
உசாத்துணைநெல்லைத தமிழ்ச் சான்றோர்கள், ஆசிரியர் நல்லையராஜ், காவியா வெளியீடு, சென்னை - முதல் பதிப்பு: 2011 |
Portal di Ensiklopedia Dunia