இரும்பாடி காசி விசுவநாதர் கோயில்
இரும்பாடி காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியின் இரும்பாடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] கடல் மட்டத்திலிருந்து சுமார் 221 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இரும்பாடி காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°02′47″N 77°56′13″E / 10.046475°N 77.937005°E ஆகும். இக்கோயிலில் மூலவர் காசி விசுவநாதர் மற்றும் தாயார் விசாலாட்சி ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் கிணற்று தீர்த்தம்; தல விருட்சம் வில்வ மரம் ஆகும். சிவாகம முறைப்படி பூசைகள் நடைபெறுகின்றன. காசி விசுவநாதர், விசாலாட்சி, காசிலிங்க நர்த்தன கிருஷ்ணன், பறக்கும் வடிவிலான நாகர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3] பங்குனி பிரம்மோற்சவம், மாசி மகம், மகா சிவராத்திரி, அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை மற்றும் பிரதோசம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia