எடத்தநாட்டுக்கரை
![]() எடத்தநாட்டுக்கரை அல்லது கொட்டப்பல்ல (Edathanattukara or Kottappalla என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். புவியியல்![]() எடத்தநாட்டுக்கரை மன்னார்காடு வட்டம், ஆலநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. கிராமத்தின் மொத்த பரப்பளவு சுமார் 30 சதுர கிலோமீட்டர் (12 சதுர மைல்) ஆகும். எடத்தநாட்டுக்கரையின் தென்கிழக்கு எல்லை வழியாக வெல்லியாறு பாய்கிறது. சொற்பிறப்பியல்கிராமத்தின் பெயரின் தோற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. எடத்தநாட்டுக்கரை என்பது கரை என்ற கூறப்படுகிறது. வடக்கு மலைக்கும் வெள்ளியாற்றிற்கும் இடையில் அமைந்திருப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாக பழங்கால மக்களின் கருத்தாக உள்ளது. இந்த இடத்தில் நெல்லிக்காய் மலைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இதற்கு நெல்லிக்கூர்சி என்ற பழைய பெயரும் உண்டு. எடத்தநாட்டுக்காரைக்கு நடுவில், கோடியம் குன்னு எனப்படும் குன்று ஒன்றைக் காணலாம். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia