ஓர்சே அருங்காட்சியகம்
ஓர்சே அருங்காட்சியகம் (French: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று. இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்டு நிறுவப்பட்ட, முன்னால் தொடருந்து நிலையமான "கார் ஓர்சே" (Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன. உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத (post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே, எட்கார் டெகாஸ், பியரே-ஒகஸ்டே ரெனோயிர், பால் செசான், ஜார்ஜ் சூரத், அல்பிரட் சிஸ்லே, போல் காகுயின், வின்சென்ட் வான் கோ மற்றும் கிளாடு மோனெ ஆகியோரின் ஓவியங்களும் அடங்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia