க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1
![]() க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்பது க. அயோத்திதாசப் பண்டிதர்[1] வெவ்வேறு ஆண்டுகளில் தனித்தனி நூல்களாகப் பார்ப்பனியத்தை விமர்சித்து எழுதிய ஐந்து நூல்களின் தொகுப்பு நூலாகும். பல்வேறு காலத்தில் எழுதப்பட்ட இந்நூல்களைத் தலித் சாகித்ய அகாடமி என்ற பதிப்பகத்தார், 1999 ஆம் ஆண்டு தொகுத்து வெளியிட்டனர். இந்நூல் 158 பக்கங்களைக் கொண்ட, சமூகவியல் சார்ந்த விழிப்புணர்வு நூலாகும். தமிழ்நாடு அரசு அறிவித்த, நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில், இந்நூலும் ஒன்றாகும். சாதியம் குறித்த விழிப்புணர்வை இந்நூல் பிரதானமாக வழங்குகிறது.[2] நூலாசிரியரின் எழுத்தாக்கத்தால், இந்திய சட்ட அறிஞர் அம்பேத்கர், பெளத்தத்தின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு காரணியாக இருந்து, மன எழுச்சி அடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. உள்ளடக்கம்வெவ்வேறு காலகட்டத்தில் அரசியல் சமூகம் சார்ந்து நூலாசிரியர் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இம்முதல் தொகுதி ஐந்து நூல்கள் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்
உயவுத்துணை
வெளி இணைப்புகள்
. |
Portal di Ensiklopedia Dunia