கட்டாய நடுவர் தீர்ப்பாயம்கட்டாய நடுவர் தீர்ப்பாயம் (compulsory arbitration) என்பது தொழிலாளர்களின் பிரச்சினையினைத் தீர்க்கும் தீர்ப்பாயம் ஆகும்.சட்டங்களின் மூலம் தொழிலாளர் மற்றும் மேலாண்மை ஆகிய இரு தரப்பினரையும் சிக்கலைத் தீர்க்க கட்டாயப்படுத்துகிறது. வேலை நிறுத்தத்தின் சாத்தியக்கூறுகள் பொது நலனை கடுமையாக பாதிக்கும் போது இந்த சட்டங்கள் பெரும்பாலும் பொருந்துகிறது. வழக்கமான பொதுக் கூட்டு பேரம் பேசும் முறை மூலம் இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டத் தவறினால், சில தொழிலாளர் ஒப்பந்தங்கள் கட்டாய நடுவர் மன்றத்தின் மூலம் சிக்கல் தீர்ப்பதற்கான விதிகளை உருவாக்குகின்றன. [1] ஆத்திரேலியாவில்ஆத்திரேலிய சமரசம் மற்றும் நடுவர் சட்டம் 1904 , பொதுநலவாய சமரசம் மற்றும் நடுவர் நீதிமன்றத்தை நிறுவுவதன் மூலம் ஆத்திரேலியாவிற்கான தொழில்துறை உறவுகளில் சட்டத்தின் ஆட்சியை அறிமுகப்படுத்தியது. 1906 முதல் ஆத்திரேலியா, மேலாண்மைக்கும் ஊழியர்களுக்கும் இடையே கட்டாய நடுவர் முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டப்பூர்வ நடுவர் அமைப்பு, தொழில்துறை உறவுகள் நீதிமன்றம் அல்லது ஆணையம் மற்றும் ஹார்வெஸ்டர் நீதிமன்ற வழக்கு ஆகியவை ஆத்திரேலிய தொழில்துறை உறவு முறைக்கு அடித்தளமாக உள்ளன. இந்த முறை 1983 ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்டது. ஜான் ஹவார்ட் தலைமையிலான முன்னாள் லிபரல் கட்சி அரசாங்கம், வொர்க்சாய்ஸ் மூலம் அதை மேலும் மாற்றியமைக்க முயன்றது. [2] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia